search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மத்தியபிரதேசத்தில் தேசிய பூங்காவில் 3 குட்டிகளை ஈன்ற நமீபிய சிறுத்தை
    X

    மத்தியபிரதேசத்தில் தேசிய பூங்காவில் 3 குட்டிகளை ஈன்ற நமீபிய சிறுத்தை

    • ஆஷா என்ற சிறுத்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பு 3 குட்டிகளை ஈன்றிருந்தது.
    • மற்றொரு சிறுத்தையான ‘ஜ்வாலா’ 3 குட்டிகளை ஈன்றுள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி பூபேந்தர் யாதவ் தெரிவித்துள்ளார்.

    நாட்டில் அழிந்து வரும் சிறுத்தை இனத்தை மீண்டும் இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்காக மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் கடந்த 2022-ம் ஆண்டு நமீபியாவில் இருந்து 8 சீட்டா ரக சிறுத்தைகளை பெறுவதற்கு ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்படி 8 சிறுத்தைகள் மத்திய பிரதேசத்தில் அமைந்துள்ள குனோ தேசிய பூங்காவுக்கு கொண்டுவரப்பட்டன. அதில் ஒன்றான ஆஷா என்ற சிறுத்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பு 3 குட்டிகளை ஈன்றிருந்தது.

    இந்நிலையில் மற்றொரு சிறுத்தையான 'ஜ்வாலா' 3 குட்டிகளை ஈன்றுள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி பூபேந்தர் யாதவ் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது வலைதள பதிவில், குனோவின் புதிய குட்டிகள்! ஜ்வாலா என்று பெயரிடப்பட்ட நமீபிய சிறுத்தை 3 குட்டிகளை ஈன்றது. நாடு முழுவதும் உள்ள அனைத்து வனவிலங்கு ஆர்வலர்களுக்கு வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.

    Next Story
    ×