என் மலர்
இந்தியா

பேச்சுதான்... நடவடிக்கை இல்லை... பெண்கள் பாதுகாப்பு விவகாரத்தில் மோடி அரசை விளாசிய கார்கே
- நாட்டில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 43 குற்றங்கள் பெண்களுக்கு எதிராக நடைபெறுகிறது.
- ஒவ்வொரு நாளும் 22 குற்ற நடவடிக்கைகள் தலித்-பழங்குடியின பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கிறது.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை பயிற்சி மருத்துவர் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றது. மேலும் பல இடங்களில் நடைபெற்ற பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் தொடர்பாக போராட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில் பிரதமர் மோடி பெண்கள் பாதுகாப்பு பற்றி செங்கோட்டையில் கொடி ஏற்றும்போது பேசுகிறார். ஆனால் அவரது அரசு பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டினார்.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரையும் அழைத்துச் சென்று நாம் அனைவரும் ஒன்றிணைந்து இதற்கு தீர்வு காண வேண்டும்.
நம்முடைய பெண்களுக்கு எதிரான எந்தவொரு அநீதியையும் ஏற்றுக் கொள்ள முடியாது. வேதனையானது. கண்டிக்கக்கூடியது. மகள்களுக்கு சமாமான உரிமையை உறுதிப்படுத்துவது நமக்கு அவசியமானது. பெண் குழந்தைகளை காப்பது மட்டுமல்ல.
பெண்களுக்கு பாதுகாப்பு தேவை. பாதுகாப்பது அல்ல. நாட்டில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 43 குற்றங்கள் பெண்களுக்கு எதிராக நடைபெறுகிறது. ஒவ்வொரு நாளும் 22 குற்ற நடவடிக்கைகள் மிகவும் பாதிக்கப்பட்ட தலித்-பழங்குடியின மக்களின் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கிறது. அச்சம், மிரட்டல், சமூகக் காரணங்களால் - பதிவு செய்யப்படாத எண்ணற்ற குற்றங்கள் உள்ளன.
பிரதமர் மோடி செங்சோட்டையில் கொடி ஏற்றி, பலமுறை பெண்கள் பாதுகாப்பு பற்றி பேசியிருக்கிறார். அவரது அரசு கடந்த 10 ஆண்டுகளில் பெண்களுக்கு எதிராக குற்றத்தை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, அவரது கட்சி பலமுறை பாதிக்கப்பட்டவரின் கேரக்டர்களை படுகொலை செய்துள்ளது வெட்கக்கேடானது.
ஒவ்வொரு சுவரிலும் பேட்டி பச்சாவோ (பெண் குழந்தைகளை காப்போம். பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்) ஓவியம் வரைவது சமூக மாற்றத்தை ஏற்படுத்துமா? அல்லது அரசாங்கத்தின் சட்டம் ஒழுங்கை திறமையாக மாற்றுமா?
நாம் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க முடியுமா? நமது குற்றவியல் நீதி அமைப்பு மேம்பட்டுள்ளதா? சமூகத்தின் சுரண்டப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட பிரிவினர் இப்போது பாதுகாப்பான சூழலில் வாழ முடியுமா?
2012ல் டெல்லியில் நிர்பயா சம்பவம் நடந்தபோது, நீதிபதி வர்மா கமிட்டியின் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டபோது, அந்த பரிந்துரைகளை இன்று முழுமையாக அமல்படுத்த முடியுமா?
பெண்கள் எல்லா இடங்களிலும் பயம் இன்றி செல்வதை உறுதி செய்வதற்கான நடவடிக்கையை எடுக்கும் நேரம் தற்போது நமக்கு வந்துள்ளது.
இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே குறிப்பிட்டுள்ளார்.






