search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கன்னட நடிகர் கார் மோதி பெண் பரிதாப பலி- போலீசார் கைது செய்து விசாரணை
    X

    கன்னட நடிகர் கார் மோதி பெண் பரிதாப பலி- போலீசார் கைது செய்து விசாரணை

    • நாகபூஷணா அவர்களை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றார்.
    • நடிகர் நாகபூஷணாவை போலீசார் கைது செய்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெங்களூரு:

    பிரபல கன்னட நடிகர் நாகபூஷணா நேற்று இரவு தனது காரில் உத்தரஹள்ளியில் இருந்து சோணனகுண்டே பகுதிக்கு சென்று கொண்டிருந்தார்.

    பெங்களூரு வசந்தபரா மெயின் ரோட்டில் சென்ற போது வேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோர நடை பாதையில் நடந்து சென்று கொண்டிருந்த கிருஷ்ணா (வயது 58) அவரது மனைவி பிரேமா (48) ஆகியோர் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.

    உடனே நடிகர் நாகபூஷணா அவர்களை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றார். ஆனால் வழியிலேயே பிரேமா இறந்து விட்டார். கிருஷ்ணா இரு கால்கள் மற்றும் தலையில் பலத்த காயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் தொடர்பாக குமாரசாமி போக்குவரத்து காவல் நிலைய போலீசார் அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் காரை ஓட்டியதாக வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பாக நடிகர் நாகபூஷணாவை போலீசார் கைது செய்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×