search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    குடிபோதையில் ரோடு என நினைத்து தண்டவாளத்தில் காரை ஓட்டிய குடிமகன்...!
    X

    குடிபோதையில் ரோடு என நினைத்து தண்டவாளத்தில் காரை ஓட்டிய குடிமகன்...!

    • குடிபோதையில் இருந்த ஜெயபிரகாசை கைது செய்தனர்.
    • குடிபோதையில் தண்டவாளத்தில் காரை ஓட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கேரள மாநிலம் கண்ணூர் அருகேயுள்ள தேலே செவ்வா என்ற இடத்தில் ரயில்வே கேட் உள்ளது.

    இந்த ரெயில்வே கேட் அருகே நேற்றிரவு ஜெயபிரகாஷ் என்பவர் குடிபோதையில் காரை ஓட்டி வந்துள்ளார்.பின்னர் அவர் தண்டவாளத்தில் 15 மீட்டர் துரம் காரை ஓட்டி சென்றுள்ளார். இதை கண்ட கேட் கீப்பர் பதறி போய் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

    பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தண்டவாளத்தில் இருந்த காரை அப்புறப்படுத்தினர். மேலும் குடிபோதையில் இருந்த ஜெயபிரகாசையும் கைது செய்தனர்.

    பின்னர் அவர் மீது குடிபோதையில் வாகனத்தை இயக்குதல் மற்றும் ரெயில்வே சட்டப்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    குடிபோதையில் தண்டவாளத்தில் காரை ஓட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×