search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தவறான விமர்சனங்களை தவிர்க்க வேண்டும்- இந்திய வானிலை ஆய்வு மையம்
    X

    தவறான விமர்சனங்களை தவிர்க்க வேண்டும்- இந்திய வானிலை ஆய்வு மையம்

    • தென் தமிழகத்தை கண்காணிக்க 3 டாப்ளர் ரேடார்கள் பயன்பாட்டில் உள்ளன.
    • இந்தியாவின் சிறந்த ரேடார் தொழில்நுட்ப வல்லுநர்கள் சென்னை வானிலை ஆய்வு மையத்தில் பணியாற்றுகிறார்கள்.

    இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை வானிலையை கண்காணிக்க டாப்ளர் ரேடார்கள். சென்னை வானிலை ஆய்வு மையம் நவீனமாக இல்லாமல் இருப்பதாக தவறான விமர்சனங்களை தவிர்க்க வேண்டும்.

    தென் தமிழகத்தை கண்காணிக்க 3 டாப்ளர் ரேடார்கள் பயன்பாட்டில் உள்ளன.

    உலக வானிலை அமைப்பு இந்திய வானிலை ஆய்வு துறையின் கட்டமைப்பு, முன்னெச்சரிக்கைகளை உலகத்தரம் வாய்ந்தது என பாராட்டியுள்ளது.

    வர்தா, கஜா, நிவர், மாண்டோஸ், மிச்சாங் புயல்கள் குறித்து வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

    இந்தியாவின் சிறந்த ரேடார் தொழில்நுட்ப வல்லுநர்கள் சென்னை வானிலை ஆய்வு மையத்தில் பணியாற்றுகிறார்கள்.

    சென்னை வானிலை மையத்தை இலக்காக வைத்து செய்யப்படும் விமர்சனங்கள அர்ப்பணிப்போடு இயங்கும் பணியாளர்களை புண்படுத்துகிறது.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    Next Story
    ×