search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    டெல்லியில் மேலும் 5 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு
    X

    டெல்லியில் மேலும் 5 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு

    • தென்மேற்கு டெல்லி வசந்தவிகார், முகிர்தா, ஆர்.கே. புரம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று அதிகாலை பலத்த மழை கொட்டியது.
    • மழை காரணமாக டெல்லி-நொய்டா தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    புதுடெல்லி:

    தென்மேற்கு டெல்லி வசந்தவிகார், முகிர்தா, ஆர்.கே. புரம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று அதிகாலை பலத்த மழை கொட்டியது. இதனால் ரோடுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது.

    மழை காரணமாக டெல்லி-நொய்டா தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றது. வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் வாகன ஓட்டிகள் தவிப்புக்குள்ளானார்கள்.

    டெல்லியில் மேலும் 5 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×