search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கவுகாத்தி ஐஐடி மாணவன் திடீர் மரணம்- விடுதியில் சடலமாக மீட்பு
    X

    கவுகாத்தி ஐஐடி மாணவன் திடீர் மரணம்- விடுதியில் சடலமாக மீட்பு

    • இயற்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    • மாணவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் கவுகாத்திக்கு விரைந்துள்ளனர்.

    கவுகாத்தி:

    அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள ஐஐடி-யில் இளங்கலை வடிவமைப்பு இறுதியாண்டு படிக்கும் மாணவன் ஒருவர் திடீரென இறந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவைச் சேர்ந்த சூரிய நாராயணன் என்ற அந்த மாணவன், விடுதி அறையில் இறந்து கிடந்தான். இன்று காலையில் உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இயற்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். பிரேத பரிசோதனையின் முடிவில் இறப்புக்கான காரணம் தெரியவரும்.

    மாணவன் மரணம் குறித்து அவனது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் கவுகாத்திக்கு விரைந்துள்ளனர். மாணவன் மறைவுக்கு ஐஐடி சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×