என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
ஐதராபாத் அரசு அறிவியல் கல்லூரி ஆய்வகத்தில் ரசாயன வாயு கசிவு- 25 மாணவிகள் மயக்கம்
Byமாலை மலர்18 Nov 2022 12:42 PM GMT (Updated: 18 Nov 2022 12:43 PM GMT)
- உடல் நலம் பாதிக்கப்பட்ட மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி.
- ரசாயன வாயு கசிவு குறித்த தடயவியல் குழு ஆய்வு .
ஐதராபாத்:
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள கஸ்தூரிபா அரசு கல்லூரி ஆய்வகத்தில் இன்று ரசாயன வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த ஆய்வகத்தில் இருந்த 25 மாணவிகள் வாந்தி, மயக்கம் உள்ளிட்ட உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டனர். உடனடியாக ஆம்புலன்ஸ் உதவியுடன் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட மாணவிகளின் உயிருக்கு ஆபத்தில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ரசாயன வாயு கசிவு ஏற்பட்டது எப்படி என்பது குறித்து அறிய தடயவியல் குழுவினர் சம்பவ இடத்தில் சோதனை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவத்தை அடுத்து அந்த கல்லூரியில் இருந்த பிறதுறை மாணவிகளும் உடனடியாக கல்லூரியை விட்டு வெளியேறினர். இந்த சம்பவம் ஐதராபாத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X