search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஐதராபாத் அரசு அறிவியல் கல்லூரி ஆய்வகத்தில் ரசாயன வாயு கசிவு- 25 மாணவிகள் மயக்கம்
    X

    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவிகள் 

    ஐதராபாத் அரசு அறிவியல் கல்லூரி ஆய்வகத்தில் ரசாயன வாயு கசிவு- 25 மாணவிகள் மயக்கம்

    • உடல் நலம் பாதிக்கப்பட்ட மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி.
    • ரசாயன வாயு கசிவு குறித்த தடயவியல் குழு ஆய்வு .

    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள கஸ்தூரிபா அரசு கல்லூரி ஆய்வகத்தில் இன்று ரசாயன வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த ஆய்வகத்தில் இருந்த 25 மாணவிகள் வாந்தி, மயக்கம் உள்ளிட்ட உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டனர். உடனடியாக ஆம்புலன்ஸ் உதவியுடன் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.


    பாதிக்கப்பட்ட மாணவிகளின் உயிருக்கு ஆபத்தில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ரசாயன வாயு கசிவு ஏற்பட்டது எப்படி என்பது குறித்து அறிய தடயவியல் குழுவினர் சம்பவ இடத்தில் சோதனை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவத்தை அடுத்து அந்த கல்லூரியில் இருந்த பிறதுறை மாணவிகளும் உடனடியாக கல்லூரியை விட்டு வெளியேறினர். இந்த சம்பவம் ஐதராபாத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×