search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அசாமில் பைப்லைன் உடைந்தது... நீர்வீழ்ச்சி போல் சீறிப்பாய்ந்த தண்ணீர்
    X

    அசாமில் பைப்லைன் உடைந்தது... நீர்வீழ்ச்சி போல் சீறிப்பாய்ந்த தண்ணீர்

    • பேரிடர் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து தண்ணீர் பைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    • கடந்த மாதம் கவுகாத்தியின் கர்குலி பகுதியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

    அசாம் மாநிலம் கவுகாத்தியின் ராஜ்கர் பகுதியில் இன்று குடிநீர் வாரியத்தின் பைப்லைன் திடீரென உடைந்தது. கவுகாத்தி வர்த்தகக் கல்லூரி ஆர்.ஜி.பருவா சாலைக்கு அருகில் இந்த உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நீர்வீழ்ச்சி போன்று தண்ணீர் சீறிப்பாய்ந்து வெளியேறி, அந்த பகுதி முழுவதும் வெள்ளக்காடாக மாறியது. தண்ணீர் அதிக அளவில் சாலையில் வீணாக சென்றது. இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்த சம்பவத்தால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுபற்றி அதிகாரிகளுக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். இதையடுத்து பேரிடர் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து தண்ணீர் பைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இதேபோல் கடந்த மாதம் கவுகாத்தியின் கர்குலி பகுதியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×