என் மலர்tooltip icon

    இந்தியா

    ஜனாதிபதியை சந்தித்த சுபான்ஷு சுக்லா: ககன்யான் திட்டம் வெற்றிபெற வாழ்த்து
    X

    ஜனாதிபதியை சந்தித்த சுபான்ஷு சுக்லா: ககன்யான் திட்டம் வெற்றிபெற வாழ்த்து

    • சுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்தில் 18 நாட்கள் தங்கி இருந்தார்.
    • சுபான்ஷு சுக்லா உள்பட 4 விண்வெளி வீரர்களும் கடந்த ஜூலை 15-ம் தேதி பூமிக்கு திரும்பினர்.

    புதுடெல்லி:

    இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா (39). இவர் கடந்த ஜூன் 25-ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையம் சென்றார். அங்கு சுமார் 18 நாட்கள் தங்கி பயிர்கள் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட்டனர். ஆராய்ச்சி பணி நிறைவடைந்ததும் சுபான்ஷு சுக்லா உள்பட 4 விண்வெளி வீரர்களும் கடந்த ஜூலை 15-ம் தேதி பூமிக்கு திரும்பினர்.

    இதன்மூலம் 41 ஆண்டுகளில் விண்வெளிக்குச் சென்று திரும்பிய முதல் இந்தியர் என்ற பெருமையை சுபான்ஷு சுக்லா பெற்றார்.

    இதற்கிடையே, விண்வெளி சென்று திரும்பிய சுபான்ஷு சுக்லா அமெரிக்காவில் இருந்து கடந்த 17-ம் தேதி இந்தியா வந்தார். அவர் கடந்த 18-ம் தேதி டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார்.

    இந்நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்முவை இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா சந்தித்தார். டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

    அப்போது, சுபான்ஷு சுக்லா விண்வெளியில் தனது அனுபவங்களை ஜனாதிபதியிடம் பகிர்ந்து கொண்டார். அப்போது ககன்யான் திட்டம் வெற்றி பெற சுபான்ஷு சுக்லாவை ஜனாதிபதி முர்மு வாழ்த்தினார்.

    Next Story
    ×