search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஒடிசாவில் இன்று சரக்கு ரெயில் தடம் புரண்டது
    X

    ஒடிசாவில் இன்று சரக்கு ரெயில் தடம் புரண்டது

    • கோரமண்டல உள்பட 3 ரெயில்கள் விபத்துக்குள்ளாகி 275 பேர் பலி
    • 1000 ஊழியர்கள் இரவு பகலாக வேலைப்பார்த்து சீரமைப்பு பணி முடிந்து தற்போது ரெயில் சேவை தொடக்கம்

    ஒடிசாவில் கடந்த வெள்ளிக்கிழமை மூன்று ரெயில்கள் மோதி 275 பேர் உயிரிழந்தனர். சீரமைப்பு பணி முடிவடைந்து சுமார் 51 மணி நேரத்திற்குப் பின் பஹனாகா பகுதியில் தற்போது ரெயில் சேவை தொடங்கியுள்ளது.

    மிகப்பெரிய விபத்து நடைபெற்று 3 நாட்கள் முடிவடைவதற்குள் தற்போது ஒடிசாவில் மீண்டும் ஒரு விபத்து நடந்துள்ளது.

    ஒடிசா மாநிலம் டுங்ரி சுண்ணாம்பு சுரங்கத்திற்கும் ஏசிசி பார்கார் சிமெண்ட் ஆலைக்கும் இடையில் ரெயில் தண்டவாளம் உள்ளது. இதில் சென்ற சுண்ணாம்பு ஏற்றி சென்ற ரெயிலின் ஐந்து பெட்டிகள் தடம் புரண்டுள்ளது.

    இது முற்றிலும் தனிப்பட்ட ரெயில் பாதை. ரெயில் தண்டவாளம், பெட்டிகள், என்ஜின் அனைத்தும் தனிப்பட்டவை. ரெயில்வேயுடன் எந்த வகையிலும் இணைக்கப்படவில்லை எனத் தகவில் வெளியாகியுள்ளது.கோரமண்டல உள்பட 3 ரெயில்கள் விபத்துக்குள்ளாகி 275 பேர் பலி

    Next Story
    ×