search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    16 ஆண்டுகால பயணம்.. ப்ளிப்கார்ட்-இல் இருந்து வெளியேறும் பின்னி பன்சால்
    X

    16 ஆண்டுகால பயணம்.. ப்ளிப்கார்ட்-இல் இருந்து வெளியேறும் பின்னி பன்சால்

    • ப்ளிப்கார்ட்-இல் தனது பங்குகளை விற்பனை செய்தார்.
    • தலைமை பன்பு அடங்கிய குழு நிர்வகிக்கிறது.

    ப்ளிப்கார்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பின்னி பன்சால் நிர்வாக குழுவில் இருந்து அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்துள்ளார். இதன் மூலம் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு சச்சின் பன்சால் உடன் இணைந்து துவங்கிய நிறுவனத்தில் இருந்து பின்னி பன்சால் வெளியேறுகிறார். முன்னதாக இவர் ப்ளிப்கார்ட்-இல் தனது பங்குகளை விற்பனை செய்தார்.

    "கடந்த 16 ஆண்டுகளில் ப்ளிப்கார்ட் குழுமம் அடைந்திருக்கும் வளர்ச்சியை நினைத்து பெருமையாக உணர்கிறேன். ப்ளிப்கார்ட் தற்போது முன்னணி இடத்தில் உள்ளது. இதனை உறுதியான தலைமை பன்பு அடங்கிய குழு நிர்வகிக்கிறது."

    "அதன் எதிர்காலம் தெளிவான குறிக்கோளை நோக்கி முன்னேறும் நம்பிக்கையில், நான் வேறு பாதையில் பயணிக்க முடிவு செய்துவிட்டேன். நிறுவனம் தகுதி வாய்ந்தவர்கள் கையில் இருப்பதை அறிந்து இந்த முடிவை எடுத்திருக்கிறேன்."

    "துறையில் தொடர்ந்து கடினமான போட்டியாளராக இருந்து கொண்டு, வாடிக்கையாளர் அனுபவங்களை தொடர்ந்து மாற்றுவதற்கு குழுவினருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்," என்று பின்னி பன்சால் வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவித்து இருக்கிறார்.

    Next Story
    ×