search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    டெல்லி மெட்ரோவில் ஆபாச செய்கையில் ஈடுபட்ட நபர்.. கடும் நடவடிக்கை தேவை - மகளிர் ஆணையம் நோட்டீஸ்!
    X

    டெல்லி மெட்ரோவில் ஆபாச செய்கையில் ஈடுபட்ட நபர்.. கடும் நடவடிக்கை தேவை - மகளிர் ஆணையம் நோட்டீஸ்!

    • மெட்ரோவில் மர்ம நபர் ஆபாச செய்கையில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ வைரல்.
    • டெல்லி மெட்ரோவுக்கு டெல்லி மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

    டெல்லி மெட்ரோ ரயிலில் ஆபாச செய்கையில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ஆபாச செய்கையில் ஈடுபட்ட நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று டெல்லி காவல் துறை மற்றும் டெல்லி மெட்ரோவுக்கு டெல்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மாலிவால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

    சமூக வலைதளங்களில் வெளியான வீடியோவில், நபர் ஒருவர் மெட்ரோ ரெயிலில் அமர்ந்து கொண்டு தனது கைப்பேசி திரையை பார்த்துக் கொண்டே ஆபாச செய்கையில் ஈடுபடும் பகீர் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மர்ம நபரின் ஆபாச செய்கையை பார்த்து, ரயில் பெட்டியில் இருந்த மற்ற பயணிகள் முகம் சுளித்தனர்.

    "டெல்லி மெட்ரோவில் மர்ம நபர் ஆபாச செய்கையில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வைரல் வீடியோவை பார்த்தேன். அது மிகவும் அறுவறுப்பாக இருக்கிறது. இதுபோன்ற கேவலமான செயலில் ஈடுபட்ட நபர் மீது மிக கடுமையான நடவடிக்கை எடுக்க டெல்லி காவல் துறை மற்றும் டெல்லி மெட்ரோவுக்கு நோட்டீஸ் அனுப்புகிறேன்," என்று டெல்லி மகளிர் ஆணைய தலைவர் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×