என் மலர்
இந்தியா

கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை தளர்த்தியது டெல்லி ஐகோர்ட்
- ஒவ்வொருமுறை வெளிநாடு செல்லும் போதும் விசாரணை நீதிமன்றத்திடம் அனுமதி பெற வேண்டும்
- கார்த்தி சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
கடந்த 2007-ம் ஆண்டு, ஐ.என்.எக்ஸ். மீடியா குழுமம், ரூ.305 கோடி வெளிநாட்டு நிதி பெற வெளிநாட்டு முதலீட்டு வாரியம் ஒப்புதல் அளித்ததில் முறைகேடுகள் நடந்ததாக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் எம்.பி. ஆகியோர் மீது சி.பி.ஐ. கடந்த 2017-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இந்நிலையில், ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை தளர்த்தியது டெல்லி உயர்நீதிமன்றம்
ஒவ்வொருமுறை வெளிநாடு செல்லும் போதும் விசாரணை நீதிமன்றத்திடம் அனுமதி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த கட்டுப்பாடுகளுக்கு தளர்வு கேட்டு கார்த்தி சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்
மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் வெளிநாடு செல்வதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளிநாட்டில் என்ன செய்யப் போகிறார் என்ற தகவல்களை மட்டும் விசாரணை நீதிமன்றத்தில் வழங்கினால் போதும் என டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.






