என் மலர்
இந்தியா

திருப்பதி கோவிலில் 7 மணி நேரத்தில் தரிசனம்
- திருப்பதியில் விட்டுவிட்டு மழை பெய்து வருவதால் சில்லென்று குளிர்காற்று வீசுகிறது.
- கடந்த 2 நாட்களுக்கு முன்பு 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் கூட்டம் குறைந்து காணப்படுகிறது.
தற்போது திருப்பதியில் விட்டுவிட்டு மழை பெய்து வருவதால் சில்லென்று குளிர்காற்று வீசுகிறது.
மேலும் இரவு நேரங்களில் கடும் பனிப்பொழிவு நிலவுவதால் பக்தர்கள் தரிசனத்திற்கு வர தயங்குகின்றனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
பனிப்பொழிவு மற்றும் மழையின் காரணமாக பக்தர்கள் கூட்டம் குறைந்து காணப்படுவதால் நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் சுமார் 7 மணி நேரத்தில் தரிசனம் செய்து வருகின்றனர்.
திருப்பதியில் நேற்று 62,269 பேர் தரிசனம் செய்தனர். 19,255 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 5.19 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
Next Story






