search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தாஜ்மகாலை பார்வையிட்ட டென்மார்க் அரச குடும்பம்
    X

    தாஜ்மகாலை பார்வையிட்ட டென்மார்க் அரச குடும்பம்

    தாஜ்மகாலை பார்வையிட்ட டென்மார்க் அரச குடும்பம்

    • டென்மார்க் நாட்டின் இளவரசர் மற்றும் இளவரசி இந்தியா வந்தடைந்தனர்.
    • டென்மார்க் அரச குடும்ப தம்பதிகள் தாஜ்மகாலுக்கு சென்று சுற்றிப் பார்த்தனர்.

    புதுடெல்லி:

    டென்மார்க் நாட்டின் இளவரசர் பிரடெரிக் ஆந்திரே ஹென்ரிக் கிறிஸ்டியன் மற்றும் இளவரசி மேரி எலிசபெத் ஆகியோர் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கின்றனர். இதற்காக அவர்கள் நேற்று காலை புதுடெல்லி வந்தடைந்தனர்.

    டென்மார்க் நாட்டு அரச குடும்பத்தில் இருந்து அரச தம்பதி வருவது 2 தசாப்தங்களில் இது முதன்முறை ஆகும். கடந்த 2003-ம் ஆண்டில் கடைசியாக டென்மார்க் இளவரசர் வந்து சென்றார். அதற்கு முன் 1963-ம் ஆண்டு டென்மார்க் அரசி 2-ம் மார்கரெட் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

    இந்திய துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கார் அழைப்பின் பேரில் அரச குடும்பத்தினர் வருகை தருகின்றனர் என மத்திய வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்ட செய்தி அறிக்கை தெரிவித்துள்ளது. இந்தப் பயணத்தில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்காரை, டென்மார்க் இளவரசர் ஹென்ரிக் கிறிஸ்டியன் நேரில் சந்தித்துப் பேசுகிறார். அதன்பின்னர், ஜனாதிபதி திரவுபதி முர்முவையும் அவர் நேரில் சந்தித்து பேசுகிறார் என மத்திய வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்ட செய்தி அறிக்கை தெரிவிக்கின்றது.

    இந்நிலையில், டென்மார்க் அரச குடும்ப தம்பதிகள் ஆக்ராவில் அமைந்துள்ள தாஜ்மகாலுக்கு சென்று சுற்றிப் பார்த்தனர். மேலும் அவர்கள் ஆக்ரா கோட்டைக்கும் சென்றனர்.

    Next Story
    ×