search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    டெல்லியில் நடந்த குவாட் அமைப்பு கூட்டம்- சீனா மீண்டும் எதிர்ப்பு
    X

    டெல்லியில் நடந்த குவாட் அமைப்பு கூட்டம்- சீனா மீண்டும் எதிர்ப்பு

    • குவாட் அமைப்பின் வெளியுறவுத்துறை மந்திரிகள் கூட்டம் நடைபெற்றது.
    • இந்தோ - பசிபிக் கடற் பிராந்தியத்தில் ஆக்கிரமிப்பு செயல்களை தடுப்பதில் உறுதி

    இந்தோ - பசிபிக் கடற் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தை தடுத்து, பாதுகாப்பான கப்பல் போக்குவரத்துக்காக குவாட் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நான்கு நாடுகள் இணைந்து உருவாக்கிய குவாட் அமைப்புக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    இந்நிலையில், டெல்லியில் இரண்டு நாட்கள் நடைபெற்ற ஜி20 வெளியுறவுத்துறை மந்திரிகள் கூட்டத்தை தொடர்ந்து, குவாட் அமைப்பின் வெளியுறவுத்துறை மந்திரிகள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தின் போது அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் ஜப்பான் வெளியுறவு மந்திரிகள் கூட்டறிக்கை வெளியிட்டனர். உக்ரைன் மோதல், கிழக்கு மற்றும் தென் சீனக் கடல்களின் நிலைமையை குறிப்பிட்டுள்ளனர்.

    அதில் இந்தோ - பசிபிக் கடற் பிராந்தியத்தில் ஆக்கிரமிப்பு செயல்களை தடுப்பதில் உறுதியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டத்தின் ஆட்சி, இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் மோதல்களுக்கு அமைதியான முறையில் தீர்வு காண்பது தொடர்பான கொள்கைகளை தீவிரமாக ஆதரிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால் ஆத்திரம் அடைந்துள்ள சீனா, குவாட் அமைப்புக்கு மீண்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஒரு நாட்டிற்கும் இன்னொரு நாட்டுக்குமான ஒத்துழைப்பு என்பது, அமைதி மற்றும் வளர்ச்சியின் போக்கிற்கு ஒத்துப்போவதாக இருக்க வேண்டும் என்றும் கூறி உள்ளது.

    Next Story
    ×