என் மலர்tooltip icon

    இந்தியா

    ஆந்திராவில் ராமர் கோவில் தேர் எரிப்பு
    X

    ஆந்திராவில் ராமர் கோவில் தேர் எரிப்பு

    • தேருக்கு தீ வைத்து விட்டு மர்ம நபர்கள் தப்பி சென்றனர்.
    • தேர் நிறுத்துவதில் ஏற்பட்ட பகையின் காரணமாக தேர் எரிக்கப்பட்டது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம், ஹனகனஹால் கிராமத்தில் ராமர் கோவில் உள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு புதியதாக மரத்திலான தேர் செய்யப்பட்டது.

    தேரை நிறுத்துவது சம்பந்தமாக இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் கோவிலுக்கு அருகிலேயே கொட்டகை அமைத்து தேர் நிறுத்தப்பட்டது.

    இந்த நிலையில் மர்ம நபர்கள் தேர் வைக்கப்பட்டுள்ள அறையின் கதவு பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அங்கிருந்த தேருக்கு தீ வைத்து விட்டு மர்ம நபர்கள் தப்பி சென்றனர்.

    அதிகாலையில் தேர் தீப்பிடித்து ஏறிவதை கண்டு அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் தேரின் ஒரு பகுதி முழுவதும் எரிந்து நாசமானது.

    இது குறித்து தகவல் இருந்த அனந்தபூர் கலெக்டர் வினோத்குமார், போலீஸ் சூப்பிரண்டு ஜெகதீஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    மேலும் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தீவிர விசாரணை நடத்தி குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

    விசாரணையில் தேர் நிறுத்துவதில் ஏற்பட்ட பகையின் காரணமாக தேர் எரிக்கப்பட்டது தெரியவந்தது.

    சந்தேகத்தின் பேரில் 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×