search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஆந்திர முன்னாள் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு அமெரிக்கா பயணம்
    X

    ஆந்திர முன்னாள் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு அமெரிக்கா பயணம்

    • சந்திரபாபு நாயுடு தனது மனைவி புவனேஸ்வரியுடன் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.
    • சந்திரபாபு நாயுடு மீது வழக்குகள் உள்ளதால் அவர் வெளிநாடு செல்ல ஆந்திர மாநில ஐடி அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் கடந்த 13-ந் தேதி சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடந்து முடிந்தது.

    இந்த நிலையில் முன்னாள் முதல் மந்திரியும் தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு தனது மனைவி புவனேஸ்வரியுடன் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.

    அங்கு அவர் மருத்துவ சிகிச்சை செய்து கொண்டு சில நாட்கள் ஓய்வெடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    முன்னதாக சந்திரபாபு நாயுடு மீது வழக்குகள் உள்ளதால் அவர் வெளிநாடு செல்ல ஆந்திர மாநில ஐடி அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இது குறித்து விளக்கம் அளிக்கப்பட்ட பிறகு சந்திரபாபு நாயுடு வெளிநாடு செல்ல அனுமதித்தனர்.

    Next Story
    ×