search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஏப்ரல் 1ம் தேதிக்கு முன் புதிய கல்வியாண்டு வகுப்புகளைத் தொடங்கக் கூடாது - சி.பி.எஸ்.இ.
    X

    ஏப்ரல் 1ம் தேதிக்கு முன் புதிய கல்வியாண்டு வகுப்புகளைத் தொடங்கக் கூடாது - சி.பி.எஸ்.இ.

    • ஏப்ரல் 1-ம் தேதி தொடங்கி மாா்ச் 31-ல் வகுப்புகளை நிறைவு செய்யவேண்டும்.
    • ஏப்ரல் 1-ம் தேதிக்கு முன் புதிய கல்வியாண்டு வகுப்பை தொடங்கக்கூடாது என சிபிஎஸ்இ அறிவுறுத்தியது.

    புதுடெல்லி:

    சி.பி.எஸ்.இ. செயலாளர் அனுராக் திரிபாதி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    சில பள்ளிகள் புதிய கல்வி ஆண்டுக்கான வகுப்புகளை ஏற்கனவே தொடங்கிவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது. குறிப்பிட்ட கால வரையறைக்குள்ளாக ஒட்டுமொத்த பாடங்களையும் நடத்திவிட வேண்டும் என்ற நோக்கத்தில் பள்ளிகள் மேற்கொள்ளும் இத்தகைய நடவடிக்கைகள், அதிக சுமை மற்றும் மனச்சோா்வு போன்ற பாதிப்புகளை மாணவா்கள் சந்திக்கும் நிலையை உருவாக்கும். அதோடு, வாழ்க்கைத் திறன், நன்னெறி கல்வி, சுகாதாரம் மற்றும் உடற்கல்வி, பணித்திறன் மேம்பாட்டு கல்வி, சமூக சேவை போன்ற பாடம் சாராத நடவடிக்கைகளில் மாணவா்கள் ஈடுபட முடியாத நிலையும், அதற்கு போதிய அவகாசம் கிடைக்காத நிலையும் உருவாகும்.

    இந்த பாடம் சாராத நடவடிக்கைகளும் கல்வித் திட்டத்தில் மிக முக்கியமானவையாகும். எனவே, வகுப்புகளை முன்கூட்டியே தொடங்குவதை பள்ளி முதல்வா்கள் தவிா்க்க வேண்டும். வகுப்புகள் ஏப்ரல் 1-ம் தேதி தொடங்கி மாா்ச் 31-ல் நிறைவு செய்யவேண்டும் என்ற நடைமுறையை அனைத்துப் பள்ளிகளும் கண்டிப்பாக பின்பற்றவேண்டும் என தெரிவித்துள்ளது.

    Next Story
    ×