என் மலர்
இந்தியா

பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனை முயற்சி வெற்றி
- பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
- இந்த ஏவுகணை நிர்ணயிக்கப்பட்ட இலக்கை வெற்றிகரமாகச் சென்று தாக்கியது.
புதுடெல்லி:
இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஐ.என்.எஸ். மார்முகவ் போர்க்கப்பலில் இருந்து பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இந்த ஏவுகணை நிர்ணயிக்கப்பட்ட இலக்கை வெற்றிகரமாகச் சென்று தாக்கியதாக இந்திய கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக கடற்படை அதிகாரிகள் கூறுகையில், கடற்பரப்பில் இந்திய கடற்படையின் ஆயுத பலத்தை பறைசாற்றும் வகையில் இந்த சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆயுத சோதனையானது தற்சார்பு இந்தியா திட்டத்தின் ஒரு அடையாளம், இந்திய கடற்படையின் பலத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு என தெரிவித்தனர்.
Next Story






