search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பா.ஜனதா எம்.எல்.ஏ. வீட்டை தகர்க்க முயற்சி- மணிப்பூரில் மீண்டும் பதட்டம்
    X

    பா.ஜனதா எம்.எல்.ஏ. வீட்டை தகர்க்க முயற்சி- மணிப்பூரில் மீண்டும் பதட்டம்

    • சுமார் 11 மணிக்கு மெய்தி இன மக்கள் கிழக்கு இம்பால் மாவட்டத்தில் கும்பலாக திரண்டனர்.
    • இம்பால் கிழக்கு மாவட்டத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. சுசிந்ரோ என்பவர் வீடு உள்ளது.

    இம்பால்:

    மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி மற்றும் குகி இன மக்களிடையே கடந்த மே மாதம் ஏற்பட்ட மோதல் இன்னும் முடிவுக்கு வரவில்லை.

    கடந்த ஜூலை மாதம் அந்த மாநிலத்தில் காணாமல் போன மாணவன்-மாணவி 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் மீண்டும் அந்த மாநிலத்தில் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

    கடந்த ஒரு வாரமாக மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி இன மக்கள் சாலை மறியல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று இரவு சுமார் 11 மணிக்கு மெய்தி இன மக்கள் கிழக்கு இம்பால் மாவட்டத்தில் கும்பலாக திரண்டனர்.

    அவர்கள் கைகளில் பயங்கர ஆயுதங்களை வைத்திருந்தனர் குகி இன மக்கள் வாழும் பகுதிகளில் ரகளையில் ஈடுபட்டனர். போக்குவரத்தையும் துண்டித்தனர்.

    இம்பால் கிழக்கு மாவட்டத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. சுசிந்ரோ என்பவர் வீடு உள்ளது. அவரது வீட்டை தகர்க்க முயற்சி செய்தனர். பாதுகாப்பு படையினர் உரிய நேரத்தில் தலையிட்டதால் மிகப்பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. கடந்த ஜூன் மாதமும் அவரது வீட்டை தகர்க்க முயற்சி நடந்தது.

    மணிப்பூரில் கலவரத்தை கட்டுப்படுத்த சமூக வலை தளங்களுக்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. செல்போன் சேவை இணைப்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. என்றாலும் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த முடியாத நிலை நீடிக்கிறது.

    Next Story
    ×