என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா

X
ராம்தாஸ் அத்வாலே
மனைவியா் தினம் கொண்டாட வேண்டும்- இணை மந்திரி கோரிக்கை
By
மாலை மலர்16 May 2022 4:18 AM GMT (Updated: 16 May 2022 7:55 AM GMT)

அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் மனைவிக்கு நன்றி பாராட்டும் தினம் ஏற்கெனவே கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மும்பை:
மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த ராம்தாஸ் அத்வாலே இந்திய குடியரசுக் கட்சியின் (ஏ) தலைவா் ஆவாா். 10 ஆண்டுகளுக்கு மேல் பாஜக தலைமையிலான கூட்டணியில் உள்ள இவர் தற்போது சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை மந்திரியாக உள்ளார்.
நேற்று மகாராஷ்டிர மாநிலம் சாங்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர் கூறியதாவது:-
தாய் நம்மைப் பெற்று நமக்கு வாழ்க்கையை உருவாக்கி தந்தார். அந்த வாழ்க்கைக்கு துணையாக மனைவி முக்கியமான காலகட்டத்தில் வருகிறார்.
நமது நல்லது, கெட்டது என அனைத்திலும் மனைவி உடன் இருக்கிறாா். ஒவ்வோா் ஆண்மகனின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாா் என கூறுவார்கள். இங்கு பெரும்பாலானவா்களுக்கு அந்த நபா் மனைவியாகத்தான் இருப்பார். எனவே மனைவியா் தினமும் கொண்டாடப்பட வேண்டும்.
இவ்வாறு ராம்தாஸ் அத்வாலே கூறினார்.
அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் மனைவிக்கு நன்றி பாராட்டும் தினம் ஏற்கெனவே கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
