என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
மகளிடம் பாலியல் தொந்தரவு செய்த துணை தாசில்தாருக்கு 17 ஆண்டு ஜெயில்
Byமாலை மலர்5 May 2022 4:15 AM GMT (Updated: 5 May 2022 4:15 AM GMT)
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 10 வயது மகளுக்கு பாலியல் தொல்லை அளித்த தந்தைக்கு 17 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் துணை தாசில்தாராக பணியாற்றி வந்தவர், மனைவி இறந்து விட்ட நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு முதல் 10 வயது மகளுடன் வசித்து வந்தார்.
பள்ளியில் படித்து வந்த அந்தச் சிறுமி தினமும் பள்ளிக்கு வந்த போது சோர்வாக காணப்பட்டுள்ளார். இதனை கவனித்த ஆசிரியை, சிறுமியை தனியாக அழைத்துப் பேசினார்.
அப்போது அவரது தந்தை தினமும் பாலியல் தொந்தரவு செய்வதாக மாணவி தெரிவித்துள்ளார். இதனைக் கேட்ட ஆசிரியை அதிர்ச்சி அடைந்தார். இது பற்றி பாங்கோடு போலீசில் அவர் புகார் அளித்தார்.
போலீசார் விசாரணை நடத்தி துணை தாசில்தாரை கைது செய்து வழக்கு தொடர்ந்தனர். திருவனந்தபுரம் போக்சோ கோர்ட்டு நீதிபதி வழக்கை விசாரித்து, துணை தாசில்தாருக்கு 17 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
மேலும் ரூ.16 1/2 லட்சம் அபராதமும் விதித்த அவர், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்கவும் உத்தரவிட்டார். அபராத தொகையை சிறுமியின் எதிர்கால தேவைக்கு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் துணை தாசில்தாராக பணியாற்றி வந்தவர், மனைவி இறந்து விட்ட நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு முதல் 10 வயது மகளுடன் வசித்து வந்தார்.
பள்ளியில் படித்து வந்த அந்தச் சிறுமி தினமும் பள்ளிக்கு வந்த போது சோர்வாக காணப்பட்டுள்ளார். இதனை கவனித்த ஆசிரியை, சிறுமியை தனியாக அழைத்துப் பேசினார்.
அப்போது அவரது தந்தை தினமும் பாலியல் தொந்தரவு செய்வதாக மாணவி தெரிவித்துள்ளார். இதனைக் கேட்ட ஆசிரியை அதிர்ச்சி அடைந்தார். இது பற்றி பாங்கோடு போலீசில் அவர் புகார் அளித்தார்.
போலீசார் விசாரணை நடத்தி துணை தாசில்தாரை கைது செய்து வழக்கு தொடர்ந்தனர். திருவனந்தபுரம் போக்சோ கோர்ட்டு நீதிபதி வழக்கை விசாரித்து, துணை தாசில்தாருக்கு 17 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
மேலும் ரூ.16 1/2 லட்சம் அபராதமும் விதித்த அவர், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்கவும் உத்தரவிட்டார். அபராத தொகையை சிறுமியின் எதிர்கால தேவைக்கு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X