என் மலர்tooltip icon

    இந்தியா

    தண்ணீர் என நினைத்து ஆசிட் குடித்த கல்லூரி மாணவன்
    X
    தண்ணீர் என நினைத்து ஆசிட் குடித்த கல்லூரி மாணவன்

    கூல்ட்ரிங்ஸ் கடையில் தண்ணீர் என நினைத்து ஆசிட் குடித்த கல்லூரி மாணவன்

    ஆந்திராவில் கூல்ட்ரிங்ஸ் கடையில் தண்ணீர் என நினைத்து கல்லூரி மாணவன் ஆசிட் குடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் பகுதியை சேர்ந்தவர் சைதன்யா (வயது 21). இவர் விஜயவாடாவில் உள்ள லயோலா கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    கல்லூரிக்கு அருகே உள்ள கூல்ட்ரிங்ஸ் கடைக்கு சென்ற சைதன்யா கடை உரிமையாளரிடம் குடிநீர்பாட்டில் கேட்டுள்ளார். அவர் ப்ரிட்ஜில் உள்ள குடிநீர் பாட்டிலை எடுத்துக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளார். சைதன்யா பிரிட்ஜில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து குடித்தார்.

    அப்போது தண்ணீர் பாட்டிலுக்கு பதிலாக ஆசிட் ஊற்றி வைத்து இருந்ததை எடுத்து குடித்தது தெரியவந்தது. இதனால் சைதன்யாவின் வாய் மற்றும் குடல் முழுவதும் வெந்தது. சைதன்யா வலியால் அலறி துடித்தார். அங்கிருந்தவர்கள் சைதன்யாவை மீட்டு விஜயவாடாவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கூல்ட்ரிங்ஸ் கடை உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தண்ணீர் பாட்டில் அருகில் ஆசிட் ஊற்றி வைத்திருந்தது தெரியாமல் சைதன்யா குடித்து விட்டதாக அவர் தெரிவித்துள்ளார். சைதன்யா ஆசிட் குடித்த சம்பவம் கல்லூரி மாணவர்களிடையே பரவியது.

    இதையடுத்து மாணவர்கள் ஒன்று சேர்ந்து கூல்ட்ரிங்ஸ் கடை உரிமையாளரை கைது செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
    Next Story
    ×