search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ப.சிதம்பரம்
    X
    ப.சிதம்பரம்

    தேர்தல் தோல்விக்கு சோனியா மட்டுமே காரணம் இல்லை- ப.சிதம்பரம் பேட்டி

    அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைமை பதவியில் இருக்கும் எல்லோருக்கும் பொறுப்பு உள்ளது. தலைமை மட்டும் பொறுப்பு என்று சொன்னால் மட்டுமே போதாது.

    புதுடெல்லி:

    5 மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்துள்ளதால் சோனியா காந்திக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

    இந்த நிலையில் மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:-

    சமீபத்தில் நடந்த 5 மாநில சட்டசபை தேர்தல் தோல்விக்கு சோனியா காந்தி மட்டுமே பொறுப்பேற்க முடியாது. பல காங்கிரஸ் தலைவர்களை போலவே சோனியா காந்தி மற்றும் ராகுல்காந்தி, பிரியங்கா பதவி விலக முன் வந்தனர்.

    ஆனால் இதை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி ஏற்கவில்லை. இப்போது நமது விருப்பம் என்ன? புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான செயல்முறையை நாம் விரைவுபடுத்த வேண்டும். ஆனால் அது நடக்கக் கூடியது ஆகஸ்டு மாதம்தான். அதுவரை சோனியா காந்தி தலைமை தாங்குவார் என நாங்கள் நம்புகிறோம்.

    நான் கோவாவின் பொறுப்பை ஏற்றுக் கொண்டது போல் மற்றவர்கள் மற்ற மாநிலங்களின் பொறுப்பை ஏற்றுக் கொண்டனர். பொறுப்பில் இருந்து யாரும் விலகவில்லை. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைமை பதவியில் இருக்கும் எல்லோருக்கும் பொறுப்பு உள்ளது. தலைமை மட்டும் பொறுப்பு என்று சொன்னால் மட்டுமே போதாது. கட்சி பிளவுபடாது என்று நான் நம்புகிறேன். நாம் அனைவரும் ஒன்றிணைந்து கட்சியை வலுப்படுத்த வேண்டும்

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையும் படியுங்கள்... பள்ளி பாடத்திட்டத்தில் பகவத் கீதை: குஜராத் பாஜக அரசு முடிவு- காங்கிரஸ், ஆம் ஆத்மி வரவேற்பு

    Next Story
    ×