search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பணம்
    X
    பணம்

    சிறு தொழில் நிறுவனங்களுக்கு கூடுதலாக ரூ.2 லட்சம் கோடி கடன்- மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு

    கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மீள்வதற்காக தேசிய மனநல சிகிச்சை திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    * கொரோனா காலத்திலும் நாட்டின் பொருளாதாரம் முன்னேறி வருகிறது.

    * தடுப்பூசி திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியதால் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது.

    * மக்களின் முன்னேற்றத்துக்காக மத்திய அரசு செயலாற்றி வருகிறது.

    * உலகில் உள்ள பெரிய நாடுகளில் இந்தியாவின் பொருளாதாரம்தான் அதிக வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது.

    * அடுத்த 25 ஆண்டு கால வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கும் வகையில் நிதி நிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

    * ஏழைகளுக்கு அனைத்து வாய்ப்புகளையும் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    * ஒருங்கிணைந்த வளர்ச்சி என்பதை கவனத்தில் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.

    * எல்.ஐ.சி. பொதுப்பங்கு வெளியீடு விரைவில் நடைபெறும்.

    * சுயசார்பு திட்டத்தின் கீழ் தொழில் துறையை ஊக்குவிக்கும் முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

    * நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9.27 சதவீதம் ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    * அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்ற முக்கியத்துவம் வழங்கப்படும்.

    * இளைஞர்கள், பெண்கள், பட்டியலின மக்கள், ஏழை மக்களின் வளர்ச்சிக்கான பட்ஜெட்டாக இருக்கும்.

    * தடுப்பூசி திட்டம் மிக விரைவாக செயல்படுத்தப்பட்டது பொருளாதார மீட்சிக்கு பெரிய அளவில் உதவியது.

    * மேக் இன் இந்தியா திட்டம் மூலம் 60 லட்சம் புதிய வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டன.

    * இளைஞர்கள் தொழில் தொடங்க பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

    * போக்குவரத்து வசதிகள், உள் கட்டமைப்பு வசதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

    * நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகள் 25 ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு விரிவுபடுத்தப்படும்.

    * இயற்கை விவசாய முறை ஊக்குவிக்கப்படும். எண்ணை வித்துக்கள், சிறு தானியங்கள் உற்பத்திக்கு முக்கியத்துவம் வழங்கப்படும்.

    * குறைந்தபட்ச கொள்முதல் விலை மூலம் வேளாண் விளை பொருட்கள் கூடுதலாக கொள்முதல் செய்யப்படும்.

    * பல்வேறு விவசாய பணிகளுக்கு டிரோன்கள் பயன்படுத்தப்படுவது ஊக்குவிக்கப்படும்.

    * கிசான் டிரோன் மூலம் நிலங்களை அளப்பது, வேளாண் விளைச்சலை கணிப்பது போன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

    * ஆன்லைன் மூலம் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும்.

    * சிறு தொழில் நிறுவனங்களுக்கு கூடுதலாக ரூ.2 லட்சம் கோடி கடன் வழங்கப்படும்.

    * உள்நாட்டு எண்ணை வித்துக்கள் உற்பத்தி அதிகரிக்கப்படும். உள்நாட்டில் எண்ணை வித்துக்கள் உற்பத்தியை அதிகரித்து இறக்குமதியை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    * கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மீள்வதற்காக தேசிய மனநல சிகிச்சை திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

    * பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தில் ரூ.48 ஆயிரம் கோடி செலவில் ஏழைகளுக்கு 18 லட்சம் வீடுகள் கட்டப்படும்.

    * 3.8 கோடி வீடுகளுக்கு குடிநீர் வழங்க ரூ.60 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    * நாடு முழுவதும் 2 லட்சம் அங்கன்வாடிகள் மேம்படுத்தப்படும்.

    * டிஜிட்டல் முறையிலான கற்பித்தல் ஊக்குவிக்கப்படும். டிஜிட்டல் பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்படும்.

    * ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி. பங்குகள் விற்பனை விரைவில் தொடங்கும்.

    * பிரதமரின் கதி சக்தி திட்டத்தின் மூலம் வடகிழக்கு மாநிலங்களில் வேலைவாய்ப்பை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    * 2022-23-ம் ஆண்டில் விவசாயிகளுக்கு குறைந்த பட்ச ஆதார விலை வழங்க ரு.2.7 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

    * அதிநவீன இ-பாஸ் போர்ட் திட்டம் அடுத்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்படும்.

    * நவீன தொழில்நுட்பத்துடன் ‘சிப்’ பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட் முறை அறிமுகப்படுத்தப்படும்.

    * மின்சார வாகனங்களில் பேட்டரிகளை ஜார்ஜ் செய்வதற்கு பதிலாக பிரத்தியேக மையங்களில் மாற்றிக் கொள்ளும் வசதியுடன் புதிய திட்டம் கொண்டு வரப்படும்.

    * நில சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக நாட்டின் எந்த பகுதியில் இருந்தும் பத்திரப்பதிவுகளை மேற்கொள்ள ஒரே நாடு, ஒரே பதிவு முறையை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

    * நில ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    * அனிமே‌ஷன், கிராபிக்ஸ் உள்ளிட்ட துறைகளை மேம்படுத்த, தேவைகளை பூர்த்தி செய்ய பேனல் அமைக்கப்படும்.

    * பொதுபோக்குவரத்தில் சுற்றுப்புற சூழலுக்கு மாசு இல்லாத தூய்மையான போக்குவரத்து திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

    * 2023-ம் ஆண்டுக்குள் அனைத்து கிராமங்களிலும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு முடிக்கப்படும்.

    * பாதுகாப்பு படைக்கு தேவையான பொருட்களில் 68 சதவீதம் உள்நாட்டிலேயே கொள்முதல் செய்யப்படும்.

    * சூரிய ஒளி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய ரூ.19,500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

    * சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கான நடைமுறைகள் மாற்றி அமைக்கப்படும்.

    * வடகிழக்கு மாநில மேம்பாட்டுக்காக ரூ.1,500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

    * 2030-ம் ஆண்டுக்குள் 280 கிலோவாட் மின்சாரம் சூரிய ஒளி மூலம் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    * சகி இயக்கம், வாத்சல்யா இயக்கம், ஊட்டச்சத்து 2.0 இயக்கம் ஆகியவை தொடங்கப்பட உள்ளன.

    * அதி நவீன இ-பாஸ் போர்ட் திட்டம் அடுத்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்படும்.

    * பொருளாதார மண்டல திட்டத்தை மாற்றி மாநில அரசுகளையும் சேர்க்கும் வகையில் திருத்தம் செய்யப்படும்.

    * அரசின் மூலதன செலவினங்களுக்கு ரூ.7.5 லட்சம் கோடி ஒதுக்கப்படும்.

    * கடந்த ஆண்டை விட மூலதன செலவினங்களுக்கு 35.4 சதவீதம் நிதி கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.

    * மாநிலங்களுக்கு 3 ஆண்டுகளுக்கு 1 லட்சம் கோடி ரூபாய் வட்டியில்லா கடன் உதவி வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

    * ஸ்டார்ட் அப்களுக்கு ஊக்கத்தொகை அளிக்கும் திட்டம் மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிக்கப்படும்.

    * தேசிய ஓய்வு திட்டத்திற்கு மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் அளவு 10 சதவீதத்தில் இருந்து 14 சதவீதம் ஆக உயர்த்தப்படும். உள்நாட்டில் மின்னணு பொருள் உற்பத்தி ஊக்கவிக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


    Next Story
    ×