search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மத்திய பட்ஜெட் தாக்கல்
    X
    மத்திய பட்ஜெட் தாக்கல்

    ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை மார்ச் வரை நீட்டிப்பு - மத்திய நிதி மந்திரி

    உள்நாட்டு தொழில் நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகள் மார்ச் 2023 வரை நீட்டிக்கப்படும் என்றும் மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    புது டெல்லி: 

    பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள மத்திய பட்ஜெட்டில் வரி விதிப்பு குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

    தனி நபர் வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் இல்லை. 

    மெய்நிகர் டிஜிட்டல் சொத்துகளை மாற்றுவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தின் மீது 30 % வரி.

    வரம்புக்கு மேல் உள்ள மெய்நிகர் சொத்துக்களை மாற்றினால் 1 சதவீதம் டி.டி.எஸ். கழிவு.

    கிரிப்டோ கரன்சி மூலம் ஈட்டப்படும் வருவாய் மீது 30% வரி விதிப்பு.

    மாநில அரசுகள் ஊழியர்களுக்கு என்.பி.எஸ். பங்களிப்பில் வரி விலக்கு 
    10% லிருந்து 14% ஆக அதிகரிப்பு.

    தனி நபர் வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் இல்லை.

    புதிதாக இணைக்கப்பட்ட உற்பத்தி நிறுவனங்களுக்கு 15% கார்ப்பரேட் வரி சலுகை  இன்னும் 1 வருடத்திற்கு நீட்டிப்பு.

    ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு வரிச் சலுகை மார்ச் 31, 2023 வரை நீட்டிப்பு.

    கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இணையாக, கூட்டுறவு சங்கங்களுக்கான குறைந்தபட்ச மாற்று வரியை 15 சதவீதமாக குறைக்க அரசு முன்மொழிகிறது. 

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×