என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
காதலிப்பதாக ஏமாற்றி இளம்பெண் பணம் பறித்ததால் வாலிபர் தற்கொலை
Byமாலை மலர்31 Jan 2022 6:16 AM GMT (Updated: 31 Jan 2022 6:16 AM GMT)
ஆந்திர மாநிலத்தில் காதலிப்பதாக கூறி லட்சக்கணக்கில் பணத்தை இளம்பெண் ஏமாற்றியதால் விரக்தியடைந்த வாலிபர் நண்பர்களுக்கு வீடியோ மூலம் தகவல் தெரிவித்து தற்கொலை செய்து கொண்டார்.
திருப்பதி:
ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் கொப்பிசெட்டிவாரிப்பள்ளியை சேர்ந்தவர் சங்கர் ராவ் (வயது 35). இவரது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் சங்கர் ராவுக்கு அவரது பெற்றோர் மறுமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.
சங்கர் ராவ் தானே ஒரு நல்ல பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக பெற்றோரிடம் கூறினார். இதற்கு அவரது பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் சங்கர் ராவ் அதே பகுதியை சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவரை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தார். காதலிக்காக கடந்த 2 ஆண்டுகளில் நகை, பணம் என லட்சக்கணக்கில் செலவு செய்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இளம்பெண் சங்கர் ராவின் வாட்ஸ் அப் மற்றும் செல்போன் எண்ணை பிளாக் லிஸ்டில் போட்டுள்ளார். இதையடுத்து சங்கர்ராவ் நேற்று முன்தினம் வேறு ஒரு செல்போன் எண்ணிலிருந்து இளம்பெண்ணை தொடர்பு கொண்டார்.
அப்போது இளம்பெண் உன்னை திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லை என தெரிவித்தார். ஏற்கனவே திருமணம் செய்த மனைவியும் இறந்து விட்டார். காதலியும் தன்னிடம் பணத்தைப் பறித்துக் கொண்டு ஏமாற்றி விட்டதால் சங்கர் ராவ் வாழ்க்கையில் விரக்தி அடைந்தார்.
அவர் தனது செல்போனில் வாட்ஸ்அப் குரூப்பை ஏற்படுத்தி அதில் தன்னுடைய நண்பர்களை சேர்த்துள்ளார். நேற்று முன்தினம் இரவு தான் தற்கொலை செய்யப்போவதாக தனது வாட்ஸ்அப் குரூப்பில் நண்பர்களுக்கு வீடியோ அனுப்பினார். இதனைக்கண்ட அவரது நண்பர்கள் அதிர்ச்சி அடைந்து அவரது செல்போன் எண்ணை தொடர்பு கொண்டனர். சங்கர் ராவின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.
இதையடுத்து அவரது நண்பர்கள் சங்கர் ராவின் வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டில் உள்ள அறையில் மின்விசிறியில் சங்கர்ராவ் தூக்கில் தொங்கினார்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சங்கர் ராவின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலிப்பதாக கூறி நகை, பணம் பறித்ததால் வாலிபர் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் கொப்பிசெட்டிவாரிப்பள்ளியை சேர்ந்தவர் சங்கர் ராவ் (வயது 35). இவரது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் சங்கர் ராவுக்கு அவரது பெற்றோர் மறுமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.
சங்கர் ராவ் தானே ஒரு நல்ல பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக பெற்றோரிடம் கூறினார். இதற்கு அவரது பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் சங்கர் ராவ் அதே பகுதியை சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவரை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தார். காதலிக்காக கடந்த 2 ஆண்டுகளில் நகை, பணம் என லட்சக்கணக்கில் செலவு செய்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இளம்பெண் சங்கர் ராவின் வாட்ஸ் அப் மற்றும் செல்போன் எண்ணை பிளாக் லிஸ்டில் போட்டுள்ளார். இதையடுத்து சங்கர்ராவ் நேற்று முன்தினம் வேறு ஒரு செல்போன் எண்ணிலிருந்து இளம்பெண்ணை தொடர்பு கொண்டார்.
அப்போது இளம்பெண் உன்னை திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லை என தெரிவித்தார். ஏற்கனவே திருமணம் செய்த மனைவியும் இறந்து விட்டார். காதலியும் தன்னிடம் பணத்தைப் பறித்துக் கொண்டு ஏமாற்றி விட்டதால் சங்கர் ராவ் வாழ்க்கையில் விரக்தி அடைந்தார்.
அவர் தனது செல்போனில் வாட்ஸ்அப் குரூப்பை ஏற்படுத்தி அதில் தன்னுடைய நண்பர்களை சேர்த்துள்ளார். நேற்று முன்தினம் இரவு தான் தற்கொலை செய்யப்போவதாக தனது வாட்ஸ்அப் குரூப்பில் நண்பர்களுக்கு வீடியோ அனுப்பினார். இதனைக்கண்ட அவரது நண்பர்கள் அதிர்ச்சி அடைந்து அவரது செல்போன் எண்ணை தொடர்பு கொண்டனர். சங்கர் ராவின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.
இதையடுத்து அவரது நண்பர்கள் சங்கர் ராவின் வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டில் உள்ள அறையில் மின்விசிறியில் சங்கர்ராவ் தூக்கில் தொங்கினார்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சங்கர் ராவின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலிப்பதாக கூறி நகை, பணம் பறித்ததால் வாலிபர் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X