search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லாட்டரி வியாபாரி யாக்கோப் குரியன்
    X
    லாட்டரி வியாபாரி யாக்கோப் குரியன்

    கேரளாவில் பூஜா பம்பர் குலுக்கலில் லாட்டரி சீட்டு வியாபாரிக்கு ரூ.5 கோடி பரிசு

    கேரள மாநில அரசின் பூஜா பம்பர் லாட்டரியில் முதல் பரிசாக ரூ.5 கோடி வியாபாரி யாக்கோப் குரியனுக்கு விழுந்துள்ளது.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநில அரசின் பூஜா பம்பர் லாட்டரியில் முதல் பரிசாக ரூ.5 கோடி அறிவிக்கப்பட்டது. இதற்கான லாட்டரி சீட்டு குலுக்கல் கடந்த 21-ந்தேதி நடைபெற்றது. இதில் முதல் பரிசு ஆர்.ஏ.591801 என்ற சீட்டுக்கு விழுந்தது. இதையடுத்து இந்த லாட்டரி சீட்டு வாங்கியது யார் என்று அதிகாரிகள் தேடினர்.

    இதில் கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள கூட்டாட்டுக்குளம் பகுதியை சேர்ந்த லாட்டரி சீட்டு வியாபரி யாக்கோப் குரியன் கடையில் விற்பனையானது தெரியவந்தது. ஆனால் முதல் பரிசு யாருக்கு விழுந்தது என்பது தெரியாமல் இருந்தது.

    இந்த நிலையில் முதல் பரிசு லாட்டரி சீட்டு வியாபாரி யாக்கோப் குரியனுக்கு விழுந்தது தெரிய வந்தது.

    இது குறித்து ரூ.5 கோடி பரிசு பெற்ற லாட்டரி வியாபாரி யாக்கோப் குரியன் கூறியதாவது:-

    நான் லாட்டரி சீட்டு விற்பனை செய்து வருகிறேன். ஆனால் எனக்கு இதுவரை பரிசு விழவில்லை. ஒவ்வொரு முறையும் ஒரு சீட்டை நானே வாங்கிக் கொள்வேன். அப்படி நான் வாங்கிய லாட்டரி சீட்டை என் மகனிடம் கொடுத்து வைத்திருந்தேன். அந்த சீட்டுக்குத்தான் முதல் பரிசு விழுந்தது. அதனை நான் வெளியில் சொல்லவில்லை. எனது மகன் கோவைக்கு சென்றிருந்தான். நேற்றுதான் ஊருக்கு திரும்பினான்.

    இதையடுத்து அவனை அழைத்துக்கொண்டு முதல் பரிசு தொகைக்கான லாட்டரி சீட்டை கூட்டாட்டுக்குளம் பகுதியில் உள்ள ஒரு வங்கியில் முதலீடு செய்துள்ளேன். இந்த தொகையை எங்கள் குடும்ப தேவைகளுக்கு பயன்படுத்திக்கொள்வேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×