search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாதுகாப்புப்படை வீரர்கள்
    X
    பாதுகாப்புப்படை வீரர்கள்

    ஸ்ரீநகரில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

    பயங்கரவாதிகளுக்கு எதிரான துப்பாக்கிச்சண்டையில் ஜம்மு-காஷ்மீர் போலீசார் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு 3 பேரை சுட்டு வீழ்த்தினர்.
    ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் அடிக்கடி பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி வருகின்றனர். ஜம்மு-காஷ்மீர் போலீசாருடன் பாதுகாப்புப்படையினர் இணைந்து பயங்கரவாதிகளை வேட்டையாடி வருகின்றனர்.

    ஜம்மு-காஷ்மீர் ஸ்ரீநகரில் அடிக்கடி என்கவுண்டர் நடைபெற்று வருகிறது. இன்று ஜம்மு-காஷ்மீர் ஸ்ரீநகரில் உள்ள ரம்பாக் என்ற இடத்தில் போலீசாருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையில் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.

    இதில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். 
    Next Story
    ×