என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாலகோட் விமான தாக்குதல் ஹீரோ அபிநந்தனுக்கு பதவி உயர்வு
Byமாலை மலர்3 Nov 2021 2:13 PM GMT (Updated: 3 Nov 2021 2:13 PM GMT)
பாலகோட் விமான தாக்குதல் சம்பவத்தில், பாகிஸ்தான் நவீன போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய அபிநந்தனுக்கு குரூப் கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 2019 பிப்ரவரி 14-ம் தேதி புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இதற்குப் பதிலடியாக இந்திய போர் விமானங்கள் பாகிஸ்தானில் புகுந்து பாலகோட் என்ற பகுதியில் பயங்கரவாதிகளின் முகாம்களை குண்டுகள் வீசி அழித்தன.
பாகிஸ்தான் எல்லைக்குள் இந்திய விமானங்கள் நுழைந்த கோபத்தில் பாகிஸ்தான் இந்திய எல்லைக்குள் தாக்குதல் நடத்த திட்டமிட்டது. அதன்படி எஃப்-16 ரக விமானம் மூலம் இந்தியா எல்லைக்குள் ஊடுருவ முயன்றது.
அப்போது இந்திய எல்லையில் தயாராக இருந்த இந்திய விமானப்படை, பாகிஸ்தான் திட்டத்தை முறியடித்தது. இந்திய போர் விமானங்கள் பாகிஸ்தான் விமானத்தை விரட்டி அடித்தது. இந்திய வீரர் அபிநந்தன் மிக்-21 வகை போர் விமானத்தைக் கொண்டு, பாகிஸ்தானின் எஃப்-16 நவீன போர் விமானத்தை கண்ணிமைக்கும் நேரத்தில் சுட்டு வீழ்த்தினார்.
பின்னர் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்ததால் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. பாராசூட் மூலம் குதித்து உயிர்தப்பிய அபிநந்தன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லைக்குள் விழுந்தார். கிராம மக்கள் அவரை தாக்கிய நிலையில், பாகிஸ்தான் ராணுவம் கைது செய்தது.
இந்திய அரசு, உலக நாடுகள் உதவியுடன் பேச்சுவார்த்தை நடத்தி அபிநந்தனை மீட்டது. பாகிஸ்தானின் அதிநவீன விமானத்தை சுட்டு வீழ்த்திய அபிநந்தன் ஹீரோவாக கருதப்பட்டார். சில நாட்கள் ஓய்வில் இருந்த அபிநந்தன் மீண்டும் பணிக்கு திரும்பினார்.
இந்த நிலையில் அபிநந்தனுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. விங் கமாண்டராக இருந்த அபிநந்தன் குரூப் கேப்டனாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X