என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்திய விமான படைக்கு விவேக் ராம் சவுத்திரி புதிய தளபதி
Byமாலை மலர்22 Sep 2021 9:57 AM GMT (Updated: 22 Sep 2021 9:57 AM GMT)
இந்திய விமான படைக்கு புதிய தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள ஏர்மார்ஷல் விவேக் ராம் சவுத்திரி மிக் -29 விமானத்தை இயக்குவதில் வல்லவர்.
புதுடெல்லி:
இந்திய விமானப் படையின் தளபதியாக இருக்கும் ஆர்.கே.எஸ். பதூரியா வருகிற 30-ந் தேதியுடன் ஓய்வு பெற உள்ளார்.
இதனால் புதிய தளபதியாக ஏர்மார்ஷல் விவேக் ராம் சவுத்திரி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது விமானப் படையின் துணை தளபதியாக இருந்து வருகிறார்.
விவேக் ராம் சவுத்திரி 1982-ல் விமானப் படையில் சேர்ந்தார். அதன் பிறகு பல்வேறு பொறுப்புகளை அவர் வகித்தார். மிக் -29 விமானத்தை இயக்குவதில் வல்லவர். இதுவரை 3,800 மணிநேரம் போர் விமானத்தை இயக்கி இருக்கிறார்.
விமானப் படையின் மேற்கு பிரிவு தளபதியாகவும் இருந்துள்ளார். அவர் பரமவசிஷ்டசேவா விருது, ஆதிவசிஷ்டசேவா விருது, வாயுசேனா விருது போன்ற பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.
பதவி ஓய்வு பெறும் விமானப் படை தளபதி பதூரியா கடந்த 2019 செப்டம்பர் 9-ந் தேதி தளபதி பொறுப்பை ஏற்றார். 2 ஆண்டுகளுக்குள் அவர் பதவி ஓய்வு பெறுவது குறிப்பிடத்தக்கது.
இந்திய விமானப் படையின் தளபதியாக இருக்கும் ஆர்.கே.எஸ். பதூரியா வருகிற 30-ந் தேதியுடன் ஓய்வு பெற உள்ளார்.
இதனால் புதிய தளபதியாக ஏர்மார்ஷல் விவேக் ராம் சவுத்திரி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது விமானப் படையின் துணை தளபதியாக இருந்து வருகிறார்.
விவேக் ராம் சவுத்திரி 1982-ல் விமானப் படையில் சேர்ந்தார். அதன் பிறகு பல்வேறு பொறுப்புகளை அவர் வகித்தார். மிக் -29 விமானத்தை இயக்குவதில் வல்லவர். இதுவரை 3,800 மணிநேரம் போர் விமானத்தை இயக்கி இருக்கிறார்.
விமானப் படையின் மேற்கு பிரிவு தளபதியாகவும் இருந்துள்ளார். அவர் பரமவசிஷ்டசேவா விருது, ஆதிவசிஷ்டசேவா விருது, வாயுசேனா விருது போன்ற பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.
பதவி ஓய்வு பெறும் விமானப் படை தளபதி பதூரியா கடந்த 2019 செப்டம்பர் 9-ந் தேதி தளபதி பொறுப்பை ஏற்றார். 2 ஆண்டுகளுக்குள் அவர் பதவி ஓய்வு பெறுவது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X