என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்திய சகோதர, சகோதரிகள் எங்களை காப்பாற்ற வந்தனர்: இந்தியா திரும்பிய ஆப்கானிஸ்தான் பெண் உருக்கம்
Byமாலை மலர்22 Aug 2021 6:49 AM GMT (Updated: 22 Aug 2021 6:49 AM GMT)
இந்தியர்களுடன் இன்று காலை காசியாபாத் வந்தடைந்த ஆப்கானிஸ்தான் பெண் ஒருவர் இந்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் காபூல் விமான நிலையத்தில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் இந்திய அரசு செயல்பட்டு வருகிறது. இன்று காலை காபூல் விமான நிலையத்தில் தவித்த 107 இந்தியர்களை விமானப்படை விமானம் மீட்டு இந்தியாவுக்கு அழைத்து வந்தது. அப்போது ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த சில பேர் உள்பட மேலும் 61 பேர் இந்தியா வந்தடைந்தனர்.
அவர்கள் இன்று காலை 10.15 மணியளவில் காசியாபாத்தில் தரையிறங்கினர். அவர்களில் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஒரு பெண் கூறுகையில், ‘‘ஆப்கானிஸ்தானில் நிலைமை மிகவும் மோசமடைந்து வருகிறது. ஆகவே, நான் எனது மகள் மற்றும் இரண்டு பேரக்குழந்தைகளுடன் இங்கே வந்தேன். எங்கள் இந்திய சகோதரர்கள், சகோதரிகள் எங்களை மீட்க அங்கு வந்தனர். தலிபான்கள் எனது வீட்டை தீ வைத்து கொளுத்திவிட்டனர். எங்களுக்கு உதவிய இந்தியாவுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X