என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்திய ராணுவத்திற்கு ரூ.48 ஆயிரம் கோடியில் தேஜஸ் போர் விமானங்கள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Byமாலை மலர்13 Jan 2021 2:30 PM GMT (Updated: 13 Jan 2021 2:30 PM GMT)
இந்திய ராணுவத்திற்கு ரூ.48 ஆயிரம் கோடியில் 83 தேஜஸ் போர் விமானங்கள் வாங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
சி.சி.எஸ். எனப்படும் பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவை கமிட்டி கூட்டம் இன்று நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையிலான இந்த கூட்டத்தில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்ட உயரதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்திற்கு பின் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறியதாவது ‘‘ராணுவ தளவாடங்கள் உற்பத்தியில் சுயசார்பு பெறும் வகையில் இந்திய விமானப்படைக்காக ரூ. 45 ஆயிரத்து 696 கோடி மதிப்பில் நான்காம் தலைமுறைக்கான 73 தேஜஸ் எம்.கே.1 ஏ ரக இலகு ரக போர்விமானங்கள் மற்றும் 10 தேஜாஸ் எம்.கே.1 ரக போர் விமானங்கள் என 83 நவீன போர் விமானங்கள் வாங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இதுதவிர ரூ. 1,202 கோடி மதிப்பில் ராணுவ உள்கட்டமைப்புகளை மேம்படுத்துதல் என ரூ.48,696 கோடி மதிப்பிலான ராணுவ திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X