search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேளாண் சட்டங்கள் நகல் தீயிட்டு எரிப்பு
    X
    வேளாண் சட்டங்கள் நகல் தீயிட்டு எரிப்பு

    வேளாண் சட்டங்கள் நகலை எரித்து போராட்டம் நடத்திய விவசாயிகள்

    டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், இன்று வேளாண் சட்டங்கள் நகலை எரித்து போராட்டம் நடத்தினர்.
    வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி விவசாயிகள் டெல்லி மாநில எல்லைகளில் குவிந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்றுடன் அவர்கள் போராட்டம் 50-வது நாளாக தொடர்கிறது.

    8 கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்துள்ளன. வேளாண் சட்டங்களை திரும்ப்பெற வாய்ப்பில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதேவேளையில் போராட்டம் நீடிக்கும் என்று விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன.

    வேளாண் சட்டங்கள் நகல் எரிப்பு

    இதற்கிடையில் உச்சநீதிமன்றம் வேளாண் சட்டங்களை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. மேலும், பேச்சுவார்த்தை நடத்த ஒரு குழுவை அமைத்துள்ளது. இந்த குழவில் உள்ள நான்கு பேரும் வேளாண் சட்டத்திற்கு ஆதரவானவர்கள். குழு முன் ஆஜராகமாட்டோம் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் இன்று காசிபூர் எல்லையில் லோரி பண்டிகையை முன்னிட்டு விவசாயிகள் வேளாண் சட்டங்கள் நகலை தீயிட்டு எரித்தனர்.
    Next Story
    ×