என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எதிரிகளின் ரேடார்களை அழிக்கும் ருத்ரம் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது இந்தியா
Byமாலை மலர்9 Oct 2020 9:24 AM GMT (Updated: 9 Oct 2020 12:40 PM GMT)
எதிரிகளின் ரேடார்களை அழிக்கும் வல்லமை வாய்ந்த ருத்ரம் ஏவுகணை இன்று வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது.
பலசோர்:
இந்திய ராணுவத்திற்கு வலிமை சேர்க்கும் வகையில் பல்வேறு ஏவுகணைகளை தயாரித்துள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ), தற்போது மிக மேம்படுத்தப்பட்ட கதிர்வீச்சு எதிர்ப்பு ஏவுகணையை தயாரித்துள்ளது.
ருத்ரம்-1 என்ற இந்த ஏவுகணை ஒடிசாவில் உள்ள பலசோர் கடற்கரையில் இருந்து சுகோய் -30 போர் விமானத்தின் மூலம் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இந்த ஏவுகணை இந்திய விமானப்படை (ஐஏஎஃப்) போர் விமானங்களுக்கு வான்வெளியில் மேலாதிக்கத்தை வழங்கும்.
இது முதன்மையாக எதிரிகளின் வான் பாதுகாப்புகளை முடக்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. எதிரி நாடுகளின் கண்காணிப்பு ரேடார்கள், டிராக்கிங் மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகளை அழிப்பதற்காக பல உயரங்களில் இருந்து ஏவப்படும் வகையில் இது தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த ஏவுகணையை ரேடாரால் கண்டறிய முடியாது. அமெரிக்கா போன்ற ஒரு சில நாடுகளே இத்தகைய ரேடார் எதிர்ப்பு ஏவுகணைகளை வைத்துள்ளன.
இந்த ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்த டிஆர்டிஓ அதிகாரிகளுக்கு பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X