என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சீன ராணுவ நிலைகளுக்கு அருகே உள்ள மிகவும் உயரமான மலைத்தொடர் பகுதியை கைப்பற்றிய இந்தியா - அதிகரிக்கும் பதற்றம்
Byமாலை மலர்10 Sep 2020 8:22 PM GMT (Updated: 10 Sep 2020 8:22 PM GMT)
பாங்காங் ஏரி பகுதியின் பிங்கர் 4 எல்லைப்பகுதியில் உள்ள மிகவும் உயரமான மலைத்தொடரை இந்திய ராணுவம் கைப்பற்றியுள்ளது.
புதுடெல்லி:
லடாக் எல்லையான கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன வீரர்களிடையே கடந்த ஜூன் 15 ஆம் தேதி மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்தது. இரு நாடுகளும் எல்லை முழுவதும் படைகளை குவித்துள்ளன.
போர் பதற்றத்தை தணிக்கும் விதமாக பாதுகாப்பு மந்திரிகள் மட்டம் உள்பட பல்வேறு மட்டங்களில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஆனால், இந்த பேச்சுவார்த்தைகளில் பெருமளவு முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை.
இதற்கிடையில், அருணாசலபிரதேசத்தில் உள்ள எல்லையோர கிராமத்தில் வேட்டைக்கு சென்ற 5 பேரை சீன ராணுவம் கடத்தி சென்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது.
இதற்கிடையில், இந்தியா-சீனா இடையே மோதலுக்கு மிகவும் முக்கியமான காரணமாக கருதப்படும் பகுதிகளில் லடாக்கின் லே-யில் உள்ள பாங்காங் ஏரி பகுதியும் ஒன்று. இரு நாட்டு எல்லைகளுக்கும் முக்கிய இடமாக உள்ள இந்த ஏரிப்பகுதியில் இந்திய-சீன படைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த ஏரிப்பகுதியை சுற்றியுள்ள மலைத்தொடர்களில் இரு நாடுகளும் பல்வேறு ராணுவ நிலைகளை அமைத்துள்ளது. பாங்காங் ஏரி பகுதியை சுற்றி பிங்கர் 1 முதல் பிங்கர் 14 வரை பல்வேறு நிலைகள் உள்ளன.
இதற்கிடையில், பாங்காங் ஏரியின் தெற்கு கரையோரத்தில் சீன வீரர்களின் பிங்கர் 4 (விரல் 4) நிலை அமைந்துள்ளது. இந்த பகுதிகளில் சீன படையினர் கடந்த ஏப்ரல்-மே மாதங்களின் போது அத்துமீறி நுழைந்துள்ளனர். மேலும், அந்த பகுதியில் உள்ள மலைத்தொடரில் தனது நிலைகளை அமைத்துள்ளனர்.
அந்த இடத்தை விட்டு சீன படைகள் வெளியேற வேண்டும் என இந்தியா
தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், பிங்கர் 4 பகுதியில் உள்ள மலைத்தொடரில் தொடர்ந்து தனது நிலைகளை அமைத்து வந்தனர்.
இந்நிலையில், பிங்கர் 4 பகுதியில் சீன படையினர் ஆக்கிரமித்துள்ள மலைத்தொடரை விட மிகவும் உயரமான மலைத்தொடரை இந்திய ராணுவம் கைப்பற்றியுள்ளது. இந்தியா கைப்பற்றியுள்ள மலைத்தொடர் சீன ராணுவ
நிலைகளுக்கு மிக அருகிலும் மிக உயரமாகவும் உள்ளது.
இந்திய ராணுவத்தின் இந்த நடவடிக்கை கடந்த மாதம் இறுதியில் தொடங்கப்பட்டதாகவும், தற்போது பிங்கர் 4 பகுதியின் மிகவும் உயரமான மலைத்தொடர் இந்தியாவின் கட்டுப்பாட்டில் வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ராணுவம் கைப்பற்றியுள்ள பகுதியில் இருந்து சீன ராணுவத்தின் நிலைகளையும், அவர்களின் செயல்பாடுகளையும் தெளிவாக காணமுடியும். இந்திய ராணுவத்தின் இந்த அதிரடி நடவடிக்கை பிங்கர் 4 பகுதியில் தனது ஆதிக்கத்தை மேலும் வலுப்படுத்த உதவிகரமாக இருக்கும்.
இதற்கிடையில், கடந்த நில நாட்களுக்கு முன்பு பாங்காங் ஏரியின் தெற்கு கரையோரம் அமைந்துள்ள முக்கிய நிலைகளை கைப்பற்ற சீனா முயற்சித்தபோது அதை இந்திய வீரர்கள் முறியடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லையில் இரு நாடுகளும் தனது ஆதிக்கத்தை அதிகரிக்க முயற்சித்து வருவதால் இந்தியா-சீனா இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X