என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மாநிலங்களவை துணைத்தலைவர் தேர்தல் - ஐக்கிய ஜனதாதள எம்.பி. ஹரிவன்ஷ் மனுதாக்கல்
Byமாலை மலர்9 Sep 2020 9:11 PM GMT (Updated: 9 Sep 2020 9:11 PM GMT)
மாநிலங்களவை துணைத்தலைவர் பதவிக்கு பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் ஹரிவன்ஷ் மீண்டும் போட்டியிடுகிறார்.
புதுடெல்லி:
பாராளுமன்ற மாநிலங்களவை துணைத்தலைவராக இருந்து வரும் ஐக்கிய ஜனதாதள எம்.பி. ஹரிவன்ஷின் உறுப்பினர் பதவி காலம் முடிவடைவதை தொடர்ந்து, மாநிலங்களவை துணைத்தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 7-ந் தேதி தொடங்கியது. நாளையுடன் (வெள்ளிக்கிழமை) மனு தாக்கல் முடிவடைகிறது. மாநிலங்களவை துணைத்தலைவர் பதவிக்கு பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் ஹரிவன்ஷ் மீண்டும் போட்டியிடுகிறார். இதற்கான வேட்புமனுவை நேற்று அவர் தாக்கல் செய்தார்.
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 14-ந் தேதி தொடங்கி அக்டோபர் 1-ந் தேதி வரை நடைபெறுகிறது. கூட்டத்தொடரின் முதல் நாளில் மாநிலங்களவை துணைத்தலைவர் தேர்தல் நடைபெறும் என்று தெரிகிறது. இந்த தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், பிஜூ ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஹரிவன்ஷ் வெற்றி பெற்று மீண்டும் மாநிலங்களவை துணைத்தலைவர் ஆவார் என்று பாரதீய ஜனதா நம்பிக்கை தெரிவித்து உள்ளது.
பாராளுமன்ற மாநிலங்களவை துணைத்தலைவராக இருந்து வரும் ஐக்கிய ஜனதாதள எம்.பி. ஹரிவன்ஷின் உறுப்பினர் பதவி காலம் முடிவடைவதை தொடர்ந்து, மாநிலங்களவை துணைத்தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 7-ந் தேதி தொடங்கியது. நாளையுடன் (வெள்ளிக்கிழமை) மனு தாக்கல் முடிவடைகிறது. மாநிலங்களவை துணைத்தலைவர் பதவிக்கு பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் ஹரிவன்ஷ் மீண்டும் போட்டியிடுகிறார். இதற்கான வேட்புமனுவை நேற்று அவர் தாக்கல் செய்தார்.
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 14-ந் தேதி தொடங்கி அக்டோபர் 1-ந் தேதி வரை நடைபெறுகிறது. கூட்டத்தொடரின் முதல் நாளில் மாநிலங்களவை துணைத்தலைவர் தேர்தல் நடைபெறும் என்று தெரிகிறது. இந்த தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், பிஜூ ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஹரிவன்ஷ் வெற்றி பெற்று மீண்டும் மாநிலங்களவை துணைத்தலைவர் ஆவார் என்று பாரதீய ஜனதா நம்பிக்கை தெரிவித்து உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X