search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண்ணுக்கு தொல்லை
    X
    பெண்ணுக்கு தொல்லை

    மதுஅருந்தும்படி பெண்ணுக்கு தொல்லை: கணவர் மீது வழக்குப்பதிவு

    குண்டாக இருப்பதாக கூறி வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததுடன், மதுஅருந்தும்படி பெண்ணுக்கு தொல்லை கொடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவரது கணவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    பெங்களூரு :

    பெங்களூரு சிக்கமாவள்ளியை சேர்ந்தவர் ரங்கநாத். இவருக்கும் ஒரு பெண்ணுக்கும் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்திருந்தது. அந்த பெண்ணுக்கு 27 வயதாகிறது. ரங்கநாத் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். திருமணமான புதிதில் கணவன், மனைவி சந்தோஷமாக குடும்பம் நடத்தி வந்துள்ளனர். அதன்பிறகு, குடும்ப பிரச்சினை காரணமாக ரங்கநாத்திற்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

    இதற்கிடையே, அந்த பெண் குண்டாக இருப்பதை காரணம் காட்டி பெற்றோரிடம் இருந்து கூடுதல் வரதட்சணை வாங்கி வரும்படி ரங்கநாத் கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவர் மறுத்துவிட்டதாக தெரிகிறது.

    இந்த நிலையில், அந்த பெண்ணை கேளிக்கை விடுதி, உணவு விடுதிகளுக்கு அழைத்து செல்லும் ரங்கநாத், அங்கு வைத்து மதுஅருந்தும்படி கூறி வற்புறுத்தி வந்ததாக தெரிகிறது. ஆனால் அவர் மதுஅருந்த மறுத்து வந்துள்ளார். கேளிக்கை விடுதிகளில் வைத்து தனது மனைவியை ரங்கநாத் ஆபாசமாக புகைப்படம் எடுத்தாகவும் கூறப்படுகிறது.

    அதே நேரத்தில் கேளிக்கை விடுதிகளில் வைத்து மது அருந்த மறுத்ததால், வீட்டுக்கே மது வாங்கிவிட்டு வந்து, அதனை குடிக்கும்படி கூறி தனது மனைவிக்கு ரங்கநாத் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதையடுத்து, நடந்த சம்பவங்கள் குறித்து தனது கணவர் ரங்கநாத் மீது பசவனகுடி மகளிர் போலீஸ் நிலையத்தில் அந்த பெண் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×