என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தாஜ்மகால், ஆக்ரா கோட்டை செப்டம்பர் 21-ந்தேதி முதல் மீண்டும் திறப்பு
Byமாலை மலர்7 Sep 2020 4:54 PM GMT (Updated: 7 Sep 2020 4:54 PM GMT)
மத்திய அரசு பல்வேறு தளர்வுகள் அளித்துள்ள நிலையில், சுற்றுலா பயணிகளுக்காக தாஜ்மகால், ஆக்ரா கோட்டை செப்டம்பர் 21-ந்தேதியில் இருந்து மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு பொது முடக்கத்திற்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தளர்வுகள் அளித்து வருகிறது. செப்டம்பர் 1-ந்தேதியில் இருந்து அன்லாக்-4 என்ற அடிப்படையில் பல்வேறு தளர்வுகள் அளித்துள்ளது.
இந்நிலையில் செப்டம்பர் 21-ந்தேதியில் இருந்து சுற்றுலா பயணிகளுக்காக தாஜ்மகால், ஆக்ரோ கோட்டை திறக்கப்படும் என ஆக்ரா மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
தாஜ்மகால், ஆக்ரோ கோட்டை வருபவர்கள் மத்திய அரசின் சமூக இடைவெளி, சானிடைசரால் கைகளை சுத்தம் செய்தல் உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்தையும் கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உள்ளே வருபவர்கள் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என்று, ஆன்-லைன் மூலம் டிக்கெட் வாங்க வேண்டும், டிக்கெட் கவுண்டர் திறந்திருக்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தாஜ்மகாலை பார்வையிட ஒரு நாளைக்கு 5000 பேர் அனுமிக்கப்படுவார்கள். மதியம் 2 மணிக்கு முன்பு 2500 பேரும், அதற்குப்பின் 2500 பேரும் அனுமிக்கப்படுவார்கள். ஆக்ரோ கோட்டைக்கு தினந்தோறும் 2500 பேர் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளார்.
தாஜ்மகாலை பார்வையிட ஆண்டு தோறும் 70 லட்சம் பேர் வருகை தரும் நிலையில், ஆக்ரோ கோட்டை 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X