என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேலைக்காக பேருந்தில் குஜராத் சென்றபோது விபத்து- ஒடிசா தொழிலாளர்கள் 7 பேர் பலி
Byமாலை மலர்5 Sep 2020 5:44 AM GMT (Updated: 5 Sep 2020 5:44 AM GMT)
ஒடிசாவைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலைக்காக குஜராத்திற்கு பேருந்தில் சென்றபோது, சத்தீஷ்கர் மாநிலத்தில் அந்த பேருந்து விபத்துக்குள்ளானது.
புவனேஸ்வர்:
ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் இருந்து தொழிலாளர்கள் வேலைக்காக குஜராத் மாநிலத்திற்கு பேருந்தில் சென்றனர். தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு சென்ற பேருந்து, இன்று அதிகாலை சத்தீஷ்கர் மாநிலம் ராய்ப்பூர் அருகே சென்றபோது லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பேருந்தின் ஒரு பகுதி முழுவதும் சிதைந்துபோனது. பேருந்தில் இருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். இவர்களில் 7 பேர் உயிரிழந்தனர். 7 பேர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இந்நிலையில், பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவி செய்வதற்காக உடனடியாக ராய்ப்பூர் செல்லும்படி அமைச்சர் சுசந்தா சிங்கிற்கு முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X