என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முதியோர் பாதுகாப்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Byமாலை மலர்4 Dec 2019 12:02 PM GMT (Updated: 4 Dec 2019 12:02 PM GMT)
முதியோர்களின் அத்தியாவசிய தேவைகள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் முதியோர் பாதுகாப்பு சட்டத்தில் செய்யவுள்ள திருத்தம் தொடர்பான வரைவு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்பதல் வழங்கியுள்ளது.
புதுடெல்லி:
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதியோர் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவது தொடர்பான வரைவு மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த தகவலை மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
மூத்த குடிமக்களுக்கு மற்றும் வயதானோரின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்தல், அவர்களை கவனித்துக்கொள்ளுதல், பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்யும் விதமாக ஏற்கனவே உள்ள சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும், இந்திய குடியுரிமை சட்டத்திருத்தம் மசோதா, ரெயில்வே துறையில் ஜெர்மெனி நாட்டு கூட்டுறவு தொடர்பான மசோதா , தனிநபர் தகவல் பாதுகாப்பு மசோதாக்களுக்கு மத்திய மந்திரி சபை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.
அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ள வரைவு மசோதாக்கள் வரும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் விவாதத்துக்கு வரவுள்ளதாக பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X