search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பதவி பிரமாணப் பத்திரத்தில் கையொப்பமிடும் பண்டாரு தத்தாத்ரேயா
    X
    பதவி பிரமாணப் பத்திரத்தில் கையொப்பமிடும் பண்டாரு தத்தாத்ரேயா

    இமாச்சலப்பிரதேசம் கவர்னராக பண்டாரு தத்தாத்ரேயா பதவியேற்றார்

    இமாச்சலப்பிரதேசம் மாநிலத்தின் புதிய கவர்னராக பண்டாரு தத்தாத்ரேயா இன்று பதவியேற்றுக் கொண்டார்.
    சிம்லா:

    கேரளா, தெலுங்கானா உள்பட 5 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்களை நியமனம் செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

    அவ்வகையில், இமாச்சலப்பிரதேசம் மாநிலத்தின் புதிய கவர்னராக நியமிக்கப்பட்ட பண்டாரு தத்தாத்ரேயா இன்று பதவியேற்றுக் கொண்டார்.

     பண்டாரு தத்தாத்ரேயா பதவியேற்ற காட்சி

    அம்மாநில தலைநகர் சிம்லாவில் உள்ள ராஜ்பவனில் நடைபெற்ற விழாவில் இமாச்சலப்பிரதேசம் ஐகோர்ட் நீதிபதி தரம்சந்த் சவுத்ரி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    முதல் மந்திரி ஜெய்ராம் தாக்குர் மற்றும் இதர மந்திரிகள் சட்டசபை உறுப்பினர்கள் மற்றும் அரசு உயரதிகாரிகள் பங்கேற்றனர்.
    Next Story
    ×