என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எனது ஆடையை பற்றி யாரும் கருத்து கூறக்கூடாது - நடிகை நஸ்ரத் ஜஹான்
Byமாலை மலர்1 July 2019 3:27 AM GMT (Updated: 1 July 2019 3:27 AM GMT)
நான் எதை அணிய வேண்டும் என்று யாரும் கருத்து கூறக்கூடாது. மதநம்பிக்கை என்பது ஆடைக்கு அப்பாற்பட்டது என்று நடிகை நஸ்ரத் ஜஹான் எம்.பி. கூறி உள்ளார்.
கொல்கத்தா:
மேலும், பதவி பிரமாண உறுதிமொழியை வாசித்து முடித்தவுடன், ‘வந்தே மாதரம்’ என்று கூறினார். அவரது செயலுக்கு எதிராக இஸ்லாமிய மத குருக்கள், ‘மதக்கட்டளை’ பிறப்பித்துள்ளனர். அவரது செயல் இஸ்லாமுக்கு விரோதமானது என்றும் ஜாமியா மதகுரு முப்தி ஆசாத் கசாமி தெரிவித்தார்.
ஆனால், அதற்கு நஸ்ரத் பதிலடி கொடுத்துள்ளார். தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், சாதி, இன, மத எல்லைகளை கடந்த இந்தியாவின் பிரதிநிதி நான். இப்போதும் முஸ்லிமாகவே இருக்கிறேன். ஆனால், நான் எதை அணிய வேண்டும் என்று யாரும் கருத்து கூறக்கூடாது. மதநம்பிக்கை என்பது ஆடைக்கு அப்பாற்பட்டது” என்று அவர் கூறியுள்ளார்.
அவருக்கு பா.ஜனதா பெண் தலைவர்கள் உள்பட பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
வங்காள நடிகை நஸ்ரத் ஜஹான் (வயது 29), பாராளுமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்று எம்.பி. ஆகியுள்ளார். கடந்த மாதம் அவருக்கும், தொழிலதிபர் நிகில் ஜெயின் என்பவருக்கும் துருக்கியில் திருமணம் நடைபெற்றது. கடந்த 25-ந் தேதி, பதவி ஏற்பதற்காக நஸ்ரத் பாராளுமன்றத்துக்கு வந்தார். முஸ்லிம் பெண்ணான அவர், குங்குமம் வைத்திருந்ததுடன், தாலி அணிந்திருந்தார்.
மேலும், பதவி பிரமாண உறுதிமொழியை வாசித்து முடித்தவுடன், ‘வந்தே மாதரம்’ என்று கூறினார். அவரது செயலுக்கு எதிராக இஸ்லாமிய மத குருக்கள், ‘மதக்கட்டளை’ பிறப்பித்துள்ளனர். அவரது செயல் இஸ்லாமுக்கு விரோதமானது என்றும் ஜாமியா மதகுரு முப்தி ஆசாத் கசாமி தெரிவித்தார்.
ஆனால், அதற்கு நஸ்ரத் பதிலடி கொடுத்துள்ளார். தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், சாதி, இன, மத எல்லைகளை கடந்த இந்தியாவின் பிரதிநிதி நான். இப்போதும் முஸ்லிமாகவே இருக்கிறேன். ஆனால், நான் எதை அணிய வேண்டும் என்று யாரும் கருத்து கூறக்கூடாது. மதநம்பிக்கை என்பது ஆடைக்கு அப்பாற்பட்டது” என்று அவர் கூறியுள்ளார்.
அவருக்கு பா.ஜனதா பெண் தலைவர்கள் உள்பட பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X