என் மலர்
செய்திகள்

லிப்ட் கொடுத்து இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர்கள்
உத்தர பிரதேசத்தில் இருசக்கர வாகனத்தில் இளம்பெண்ணை அழைத்துச் சென்று பலாத்காரம் செய்த 3 இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர். #UPWomanMolested #WomanHarassed
முசாபர்நகர்:
உத்தர பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டம் கந்தர்வாலி கிராமத்தைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் நேற்று வீட்டில் இருந்து புறப்பட்டு தனியாக சென்றுகொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள்களில் வந்த 3 வாலிபர்கள், அந்த பெண்ணுக்கு லிப்ட் கொடுப்பதாக கூறி அழைத்துச் சென்றுள்ளனர்.
ஆனால், அந்தப் பெண் கூறிய இடத்திற்குச் செல்லாமல் ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்திற்கு கடத்திச் சென்றுள்ளனர். அங்கு துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, இளம்பெண்ணை மூவரும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இதுபற்றி பெண்ணின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளியை தேடி வருகின்றனர். #UPWomanMolested #WomanHarassed
உத்தர பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டம் கந்தர்வாலி கிராமத்தைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் நேற்று வீட்டில் இருந்து புறப்பட்டு தனியாக சென்றுகொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள்களில் வந்த 3 வாலிபர்கள், அந்த பெண்ணுக்கு லிப்ட் கொடுப்பதாக கூறி அழைத்துச் சென்றுள்ளனர்.
ஆனால், அந்தப் பெண் கூறிய இடத்திற்குச் செல்லாமல் ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்திற்கு கடத்திச் சென்றுள்ளனர். அங்கு துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, இளம்பெண்ணை மூவரும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இதுபற்றி பெண்ணின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளியை தேடி வருகின்றனர். #UPWomanMolested #WomanHarassed
Next Story






