என் மலர்
செய்திகள்

என்னை ஒழிக்க காங்கிரஸ், இடதுசாரிகள் எது வேண்டுமானாலும் செய்யலாம் - மோடி ஆவேசம்
திரிபுரா மாநிலத்தில் இன்று நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, என்னை ஒழிப்பதற்காக காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சியினர் எது வேண்டுமானாலும் செய்வார்கள் என குறிப்பிட்டார். #Congresswillstoop #Leftwillstoop #oustModi
உதய்பூர்:
பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில் திரிபுரா மாநிலத்தில் இன்று நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பேசினார்.
திரிபுராவில் 25 ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்திய இடதுசாரி கம்யூனிஸ்ட் ஆட்சியை அகற்றியதன் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் இம்மாநில மக்கள் முன்னுதாரணமாக இருந்ததாக மோடி தெரிவித்தார்.
திரிபுராவுக்குள் கால்பதிக்க முயற்சிக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முயற்சியை முறியடித்ததற்காக இங்குள்ள மக்களை பாராட்டுகிறேன். பாஜக மீது நீங்கள் வைத்துள்ள நம்பிக்கைக்காக நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
என்னை ஒழிக்க வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சி தலைவர்கள் மிகவும் கீழ்தரமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனது தலைமையிலான அரசு அண்டை நாட்டில் உள்ள பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்கும்போது இங்கிருக்கும் இவர்கள் பாகிஸ்தானுக்கு துதிபாடுகிறார்கள்.
காலகாலமாக நடுத்தர மக்களை வஞ்சித்து வந்துள்ள காங்கிரஸ் கட்சி, இந்த முறை வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையிலும் நடுத்தர மக்களுக்கு சாதகமான எவ்வித அறிவிப்பும் இடம்பெறவில்லை எனவும் மோடி கூறினார். #Congresswillstoop #Leftwillstoop #oustModi
Next Story






