என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆந்திர இளம்பெண் விபசார கும்பலிடம் விற்பனை- கணவர் உள்பட 3 பேர் மீது போலீசில் புகார்
Byமாலை மலர்26 Oct 2018 5:42 PM GMT (Updated: 26 Oct 2018 5:42 PM GMT)
ஆந்திர இளம்பெண்ணை விபசார கும்பலிடம் விற்பனை செய்தது தொடர்பாக கணவர் உள்பட 3 பேர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனப்பல்லி அடுத்த பாப்பிரெட்டி காசிபல்லியை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண்.
இவருக்கும மதனப்பல்லி ரெயில் நிலையம் அருகேயுள்ள நல்லகுட்டல பல்லியை சேர்ந்த மல்லிகார்ஜுன் என்பவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.
அவர்களுக்கு வம்சி என மகன் உள்ளார். மல்லாகார்ஜுனாவுக்கும் இளம்பெண்ணுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று இளம்பெண் தன் தாய் வீட்டிற்கு வந்து விட்டார்.
பின்னர் மதனபல்லியை சேர்ந்த நல்லபூரி எல்லம்மா என்பவரின் மகன் ரெட்டியப்பா என்பவருக்கு இளம்பெண்ணை 2-வதாக திருமணம் செய்தனர்.
அப்போது ரெட்டியப்பாவின் நண்பர் நரசிம்மலு, அவரது மனைவி அருணா ரெட்டியப்பாவிடம் மும்பையில் உனது மனைவிக்கு நல்ல சம்பளத்தில் வேலை உள்ளது. எங்களுடன் அனுப்பிவை என கேட்டுள்ளார்.ரெட்டியப்பா மனைவியை அவர்களுடன் அனுப்பி வைத்துள்ளார்.
கடந்த 2017 ஜூலை 24-ந் தேதி மும்பையில் உள்ள ராணி என்பவரிடம் இளம்பெண்ணை விற்று உள்ளனர். கடந்த 15 மாதங்களாக விபசார விடுதியில் தங்கியிருந்து இளம்பெண் அங்கிருந்து தப்பி வந்து மதனப்பல்லி டி.எஸ்.பி. சிவானந்தரெட்டியிடம் புகார் அளித்தார்.
அதில் தனது கணவருக்கு தெரிந்தே அவரது நண்பருடன் மும்பைக்கு அனுப்பி உள்ளார். எனவே எனது கணவர் ரெட்டியப்பா, அவரது நண்பர் நரசிம்மலு, அவரது மனைவி அருணா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறியிருந்தார்.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் மும்பைக்கு சென்றனர். #tamilnews
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனப்பல்லி அடுத்த பாப்பிரெட்டி காசிபல்லியை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண்.
இவருக்கும மதனப்பல்லி ரெயில் நிலையம் அருகேயுள்ள நல்லகுட்டல பல்லியை சேர்ந்த மல்லிகார்ஜுன் என்பவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.
அவர்களுக்கு வம்சி என மகன் உள்ளார். மல்லாகார்ஜுனாவுக்கும் இளம்பெண்ணுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று இளம்பெண் தன் தாய் வீட்டிற்கு வந்து விட்டார்.
பின்னர் மதனபல்லியை சேர்ந்த நல்லபூரி எல்லம்மா என்பவரின் மகன் ரெட்டியப்பா என்பவருக்கு இளம்பெண்ணை 2-வதாக திருமணம் செய்தனர்.
அப்போது ரெட்டியப்பாவின் நண்பர் நரசிம்மலு, அவரது மனைவி அருணா ரெட்டியப்பாவிடம் மும்பையில் உனது மனைவிக்கு நல்ல சம்பளத்தில் வேலை உள்ளது. எங்களுடன் அனுப்பிவை என கேட்டுள்ளார்.ரெட்டியப்பா மனைவியை அவர்களுடன் அனுப்பி வைத்துள்ளார்.
கடந்த 2017 ஜூலை 24-ந் தேதி மும்பையில் உள்ள ராணி என்பவரிடம் இளம்பெண்ணை விற்று உள்ளனர். கடந்த 15 மாதங்களாக விபசார விடுதியில் தங்கியிருந்து இளம்பெண் அங்கிருந்து தப்பி வந்து மதனப்பல்லி டி.எஸ்.பி. சிவானந்தரெட்டியிடம் புகார் அளித்தார்.
அதில் தனது கணவருக்கு தெரிந்தே அவரது நண்பருடன் மும்பைக்கு அனுப்பி உள்ளார். எனவே எனது கணவர் ரெட்டியப்பா, அவரது நண்பர் நரசிம்மலு, அவரது மனைவி அருணா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறியிருந்தார்.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் மும்பைக்கு சென்றனர். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X