search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிட்காயின் ஏ.டி.எம். அமைத்தவர் பெங்களூருவில் கைது
    X

    பிட்காயின் ஏ.டி.எம். அமைத்தவர் பெங்களூருவில் கைது

    தடை செய்யப்பட்ட பிட்காயின் வர்த்தகத்தில் ஈடுபட்டதுடன் பெங்களூருவில் அனுமதி இன்றி பிட்காயின் ஏ.டி.எம். அமைத்தவரை போலீசார் கைது செய்துள்ளனர். #Bizmanheld #BitcoinATM #BengaluruBitcoinATM
    பெங்களூரு:

    இணையம் மற்றும் வணிக செய்திகளில் பிட்காயின் (Bitcoin) எனும் கள்ளப்பணம் ஸ்பாட் லைட் பெற்றிருக்கிறது. பொதுவாக பிட்காயின் என்பது இணையத்தில் (கள்ளப்பரிமாற்றம் செய்ய மட்டும்) பயன்படுத்தக்கூடிய பணம் எனலாம். ஆனால் இதனை கொண்டு அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற தளங்களில் பொருட்களை வாங்கவோ, இதர சேவைகளை பெறவோ அல்லது பயன்படுத்தவோ முடியாது.

    பிட்காயின் என்பது கள்ளச் சந்தையில் பயன்படுத்த கண்டுபிடிக்கப்பட்ட பணம் ஆகும். இதனை கண்டறிந்தவர் மற்றும் அவரது பின்புலம் இதுவரை யாரும் அறியாத ஒன்றாக இருக்கிறது. சமீபத்தில் ஒரு பிட்காயின் மதிப்பு 16,000 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.10,31,728 வரை உயர்ந்ததே, பிட்காயின் திடீர் டிரென்ட் ஆக காரணமாக அமைந்துள்ளது.
     
    இணையத்தில் மொத்தம் 2.1 கோடி பிட்காயின்கள் மட்டும் புழக்கத்திற்கு விநியோகம் செய்யப்பட இருக்கின்றது. எனினும் இத்தகைய பிடிகாயின்களை விநியோகம் செய்ய 2140-ம் ஆண்டு வரை ஆகும் என கணிக்கப்பட்டுள்ளது. இதுவரை மட்டும் இணையத்தில் மொத்தம் 1.67 கோடி பிட்காயின்கள் புழக்கத்திற்காக விநியோகம் செய்யப்பட்டுள்ளன.

    கள்ளச்சந்தையில் இணைய பரிமாற்றங்களின் போது இதுவரை 9,80,000 பிட்காயின்கள் ஹேக்கர்கள் மற்றும் பல்வேறு திருடர்களால் திருடப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு 1500 கோடி அமெரிக்க டாலர்கள் ஆகும். இதன் இந்திய மதிப்பு சுமார் ஒரு லட்சம் கோடிகளை (967245000000) தொடுகிறது.

    ஒரே ஆண்டில் 1700 சதவீதம் உயர்ந்த பிட்காயின் விலை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15-ம் தேதி நிலவரப்படி 17 ஆயிரத்து 752 டாலர்களாக அதிகரித்தது. அந்த மாதத்தில் மட்டும் பிட்காயினின் மதிப்பு 77 சதவீதம் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் துமக்கூரு நகரை சேர்ந்த பட்டதாரியான ஹரிஷ் என்பவர் ‘அன்காயின் டெக்னாலஜிஸ்’ என்னும் நிறுவனத்தை தொடங்கி, இணையத்தின் மூலமாக பிட்காயின் பரிவர்த்தனைகளை செய்து வந்தார்.

    மேலும், ரிசர்வ் வங்கியின் நெறிமுறைகளை மீறிய வகையில் பெங்களூரு நகரில் உள்ள பிரபல ஷாப்பிங் மால் ஒன்றில் அனுமதியின்றி பிட்காயின் ஏ.டி.எம். ஒன்றையும் கடந்த வாரம் ஹரிஷ் திறந்துள்ளார்.

    இதை தொடர்ந்து பெங்களூரு போலீசார் நேற்று ஹரிஷை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி விசாரித்து வருகின்றனர். #Bizmanheld #BitcoinATM #BengaluruBitcoinATM
    Next Story
    ×