search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குஜராத்தில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து - இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரம்
    X

    குஜராத்தில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து - இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரம்

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இடிபாடுகளில் 10 பேர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால் மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    அகமதாபாத் :

    குஜராத் மாநிலம், அகமதாபாத்தின் மேற்கு பகுதியில் உள்ள ஒதவ் எனும் இடத்தில் உள்ள  4 மாடி கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. 

    இந்த விபத்தில் கட்டிட இடிபாடுகளில் 10 பேர் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்பகுதியில் தீயணைப்பு துறையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் உதவியியுடன் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இந்த விபத்து குறித்து அகமதாபாத் மாநகராட்சி ஆணையர் விஜய் நெஹ்ரா கூறுகையில், ‘ இடிந்து விழுந்த கட்டிடம் குஜராத் வீட்டு வசதி வாரியத்தால் கடந்த 1999-ம் ஆண்டு கட்டப்பட்டது. கட்டிடத்தில் விரிசல்கள் அதிகம் இருந்ததால் குடியிருக்க தகுதியற்றது என அறிவிக்கப்பட்டு இங்கு வசித்து வந்த 150-க்கும் மேற்பட்டோர் மாநகராட்சி ஊழியர்கள் துணையுடன் நேற்று வெளியேற்றப்பட்டனர்.

    ஆனால், தங்களது உடைமைகளை எடுத்துவருவதற்காக 8 முதல் 10 பேர் இன்று மீண்டும் கட்டிடத்திற்குள் சென்றுள்ளனர். அவர்கள் அனைவரும் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.’ என தெரிவித்தார்



    மேலும், இதுவரை இடிபாடுகளில் இருந்து பலத்த காயங்களுடன் இரண்டு பேர் மீட்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×